India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னார்குடி பகுதி சேர்ந்த ராஜலட்சுமி, தனது மகனின் இறப்புக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்த மன்னார்குடி பொதுத்துறை வங்கி மீது மன்னார்குடி நுகர்வோர் சங்க இணைச் செயலாளர் வேல்முருகன் மூலம் வழக்கு தொடர்ந்தார். சேவை குறைபாட்டை ஏற்படுத்திய வங்கி நிர்வாகம் ராஜலட்சுமியிடம் இழப்பீடாக ரூ 2,35,000 வழங்க திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டனர்.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். இங்கு <
தியாகராஜ சுவாமி கோயிலுக்குரிய தேரான ஆழித்தேர் 1927இல் முற்றிலுமாகத் தீக்கிரையானது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பெருமுயற்சியின் காரணமாக 1930இல் புதிய தேர் உருவாக்கம் பெற்று தேர்த் திருவிழா நடைபெற ஆரம்பித்தது. 1930இல் வடிவமைக்கப்பட்ட தேரில் 400க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் உள்ளன. 1943ஆம் ஆண்டில் தேரோட்டச் செலவு ரூ.7,200 ஆயிற்று. திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கச்சனம் அகிலா திருமண அரங்கில் நாளை பிப்ரவரி 25ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள மக்கள் கலந்து கொண்டு இந்த முகாமில் பங்கு பெற வேண்டும் என தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இன்று திருமண மண்டபத்தில் நடைபெற்ற எலக்டிரிகல் செயற்கை கைகள் பொருத்தும் இலவச மருத்துவ முகாம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முகாமை தொடங்கி வைத்தார். ஆட்சியர் மோகனசந்திரன் தலைமை வகித்தார். முகாம் ஏற்பாட்டாளர் சுனில் லுங்கட் வரவேற்றுப் பேசினார். தினமும் 150 பேர் வீதம் வரும் வியாழன் வரை முகாம் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி உள் விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு வீரர்கள் பள்ளி மாணவர்கள் மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உடைய அனைவரும் பயன்பெறும் வகையில் ஊராட்சி விளையாட்டு மன்றத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிப்ரவரி 24 இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் பொதுமக்கள் கொண்டு வந்த மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின்( phh-Ayy) ரேஷன் கடையில் e-kyc விரல் ரேகை பதிவு செய்வதற்காக வட்டாரம் வாரியாக அந்தந்த ரேஷன் கடையில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று 24.2.2025 அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. SHARE NOW.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (22.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.