India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் கிறித்தவ தேவாலயத்தில் பணிபுரிவோர் நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று தெரிவித்துள்ளார். தேவாலயத்தில் பணிபுரியும் உபதேசியர் ,கல்லறை பணியாளர், பாடகர்கள் ஆகியோருக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது இதில் உறுப்பினராக சேர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
முத்துப்பேட்டை அடுத்த கீழப்பெருமழை கிராமத்தில் நேற்று (ஜூன்.21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் ஒற்று சேர்ந்து யோகா பயிற்சி செய்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள குளத்தின் நீரில் பயிற்சிக்கு வந்த செந்தில்நாதன் மற்றும் குகன் ஆகிய இரு வாலிபர்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மிதந்தபடி யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை கிராம மக்கள் பார்த்து வியந்தனர்.
குடவாசலைச் சேர்ந்த முன்னாள் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும், குடவாசல் வர்த்தக சங்க தலைவருமான M.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு. இன்று (ஜூன்.21)காலை கட்சியின் அலுவலகம் எதிரே எஸ்டிபி கட்சியின் கொடியேற்று விழா கட்சியின் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு . பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
திருவாரூர் – காரைக்குடி ரயில் வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இன்று முதல் விரைவு ரயில் சேவை இயங்கும் தடமாக செயல்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் தற்போது வாரம்தோறும் 11 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழித்தடத்தில் அனைத்து விரைவு ரயில்களும் தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்செல்வி கூறுகையில், திருவாரூர் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 21) காலை 11மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் நகர், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி, அதம்பார் பகுதி குறைகளை கூறி பயனடையலாம் என்றார்.
திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்செல்வி கூறுகையில், திருவாரூர் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 21ம் தேதி காலை 11மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் நகர், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி, அதம்பார் பகுதி குறைகளை கூறி பயனடையலாம் என்றார்.
திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள அபிஷேகக்கட்டளை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று வருகை தந்த மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேற்கொண்டு என்ன படிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்வது, கவனச்சிதறல் இல்லாமல் எவ்வாறு படிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஜூன் 25 அன்று தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து பாடங்களுக்கும், ஜூன் 26இல் இளம் வணிகவியல், வணிக நிர்வாகவியல் மற்றும் அனைத்து கலை பாடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை ஜூன் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் டிப்ளமோ ஐடிஐ இன்ஜினியரிங் வரை படித்த மாணாக்கர்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம்
Sorry, no posts matched your criteria.