Thiruvarur

News April 24, 2024

குடவாசல் கத்தி காட்டி மிரட்டியவர்கள் கைது

image

குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகண்டம் வெட்டாறு பாலம் அருகில் கத்தியை காட்டி மிரட்டி ரௌடிசத்தில் ஈடுபட்டு இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை பறித்து சென்ற திருக்கண்ணமங்கை மேலத்தெருவை சேர்ந்த மதன்ராஜ் என்பவரின் மகன் நவீன் @ வாஞ்சிநாதன்(24) மற்றும் அம்மையப்பன், கருப்பூர், பாய்ச்சல் கடைவீதியை சேர்ந்த தியாகராஜன் மகன் சந்தோஷ் (23)ஆகியோர் குடவாசல் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

News April 24, 2024

திருத்துறைப்பூண்டி- பத்ரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

image

திருத்துறைப்பூண்டி அருகே ஒதியத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இன்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 24, 2024

திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

image

மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

தனியார் பள்ளியில் இலவச சேர்க்கை

image

திருவாரூர்: 2024-2025ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக, இன்று முதல் மே 20 வரை<> https://rte.tnschools.gov.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரியச் சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 22, 2024

பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு அமைப்பு சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 28.04.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 22, 2024

வெயிலின் தாக்கத்தை தீர்த்த நண்பர்கள் சங்கம்

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் கூல் பிரண்ட்ஸ் நண்பர்கள் சங்கம் இப்பகுதியில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் பொதக்குடி சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் தர்ப்பூசணிப்பழம், ஐஸ் மோர் ரோஸ்மில்க் போன்ற குளிர் பானங்களை வழங்கினர்.

News April 21, 2024

அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு

image

மன்னார்குடி நகரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், சோழீஸ்வரர் கோயில், திருப்பாற்கடல் தெரு காசிவிஸ்வநாதர் கோயில் ஆகிய 8 கோயில்களில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியையும் பெருமானையும் வழிபட்டனர்.

News April 21, 2024

குற்றவியல் மாவட்ட நடுவா் நீதிமன்றம்

image

குடவாசலில் குற்றவியல் மாவட்ட நடுவா் நீதிமன்றம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. குடவாசல் பகுதியில் உரிமையில் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத்தொடா்ந்து, கீழஅக்ரஹாரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

News April 20, 2024

100 வயதில் வாக்களித்த பிரமுகரின் தாயார்

image

நாகை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொச்சியூர் சமத்துவபுரம் வாக்கு சாவடி மையத்தில் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.சுப்பையாவின் மனைவியும் நாகை முன்னாள் எம்பியும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயனின் தாயார் சுப்பம்மாள் நேற்று தனது நூறாவது வயதில் வாக்களித்தார். மேலும், தனக்கு முதன்முதல் வாக்குரிமை பெற்ற போது வாக்களித்தது கதிர் அரிவாள் எனக் குறிப்பிட்டார்.

News April 19, 2024

திருவாரூர்; காலை 11 மணி நிலவரம்

image

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் திருவாரூரை உள்ளடக்கிய நாகை தொகுதியில் மட்டும் 24.92% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!