Thiruvarur

News July 1, 2024

இந்திய மாணவர் சங்கம் நாடு தழுவிய போராட்டம்

image

திருவாரூர் மாவட்டம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேசிய தேர்வு முகமையில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து, நாடு தழுவிய போராட்டம் ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று இன்று அறிவித்துள்ளது. மேலும் மத்திய பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்பு போன்ற துறைகளுக்கு நுழைவுத் தேர்வு என்ற முறையில் குளறுபடி செய்யும் NTA என்ற அமைப்பை கண்டித்து மாவட்ட தலைநகரம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

News July 1, 2024

இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்கம்

image

திருவாரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் இன்று முதல் இல்லம் தேடிக் கல்வி மையங்களை தொடர்ந்து நடத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க நிலை மையங்கள் (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ) மட்டுமே இந்த 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில் தொடர்ந்து இயங்கும் என இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News June 30, 2024

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயில் சேவை

image

திருவாரூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் கால அட்டவணை ரயில்வே துறை அறிவித்துள்ளது. வண்டி எண் 16362 வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயில் வாரம் இருமுறை ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 8 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்படும். திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, சிவகாசி, தென்காசி வழியாக எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; திருவாரூர் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி காலை 11 மணியளவில் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குறைகளுக்கான மனுக்களை நேரில் வழங்கி நிவாரணம் பெறலாம் என குறிப்பிட்டிருந்தார்.

News June 30, 2024

நாட்டுக்கோழி வளர்க்க விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைய வரும் ஜூலை 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கால்நடை உதவி மருத்துவரிடம் அளித்து பயன்பெறலாம்.

News June 29, 2024

திருவாரூர்: முதல்வரை சந்தித்த மாவட்ட செயலாளர்

image

திருவாரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் பூண்டி கே கலைவாணன் (29.6.2024) இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை துறை சார்ந்த மானிய கோரிக்கை விவாதத்திற்கு முன் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். அவருடன் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

News June 29, 2024

கலைஞர் கனவு இல்லத் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு

image

திருவாரூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக பகுதியில் வீடு பழுது நீக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய நாளை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று தெரிவித்துள்ளார். இதில் அரசு விதிகளின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News June 28, 2024

விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்ய குஷமா பொது இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் நடக்கும் இழப்பிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

திருவாரூர்; பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

image

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.

News June 27, 2024

திருவாரூர்; பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

image

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.

error: Content is protected !!