India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீடாமங்கலத்தில் கிரீன் நீடா சார்பில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி நடைபெறுகிறது. மூன்றாம் நாளான இன்று மாணவிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பயிரிடும் முறை குறித்தும் கும்பகோணத்தை சேர்ந்த பசுமை எட்வின் விளக்கமளித்தார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் தேர்வு எழுதிய மாணவிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் முதல் மாணவியாக மு.பஹிமா 500க்கு 480 மதிப்பெண்ணும், இரண்டாம் இடத்தில் நூர் அஃபிலா 500க்கு 476ம் மூன்றாவதாக த.மு.ராயிகா 500க்கு 475 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.38% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.2 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.35 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் 19ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 92.49 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.46 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.32 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் +2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி வரும் 13 ஆம் தேதி மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது என ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். மேற்படிப்பு வாய்ப்புகள் வங்கி கடன் வசதிகள் வேலைவாய்ப்புகள் குறித்தும் வழிகாட்டல் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திறன் பயிற்சி அலுவலக போன் எண் 04365-250126 தொடர்பு கொள்ளலாம்
திருவாரூா் ரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் நேற்று வழங்கப்பட்டன. அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் ரயில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டன.
திருவாரூரில் உள்ள முத்துசுவாமி இல்லத்தில் கா்நாடக சங்கீத மும்மூா்த்திகள் ஜெயந்தி விழாவைத் நேற்று நடைபெற்றது. இதை ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஜெயந்தி விழாக் குழுத் தலைவா் ராமசுப்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நாராயணி நிதி நிறுவனத் தலைவா் காா்த்திகேயன், வேலுடையாா் கல்விக் குழுமத் தலைவா் கேஎஸ்எஸ். தியாகபாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரை தலைமையகமாக கொண்டு வனம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது இந்த அமைப்பின் மூலமாக ஏற்றம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் நன்றாக படித்து தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கு உதவும் என தெரிவித்தனர்.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சமுதாயக் கல்லூரியில் நுழைவுத் தோ்வு இல்லா இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. இதில், மின்னிதழ், ஊடகவியல், வணிகவியல் தொழிற்கல்வி, சுற்றுலா, விருந்தோம்பல் மேலாண்மை ஆகிய இளநிலைப் படிப்புகளுக்கும், கல்வெட்டியல், பாரம்பரிய மேலாண்மை ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ”நான் முதல்வன்” திட்டம் குறித்த ஆலோசனை ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியான கல்லூரி கனவு இந்த வாரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.