India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மன்னார்குடி அடுத்த மேலதுளசேந்திரபுரத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (74). இவர் சம்பவத்தன்று வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடந்தபோது அவர் மீது பைக் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் காயமடைந்த அவரை மீட்டு மன்னார்குடி GH-ல் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மணல்மேடு கிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற இருந்த நிலையில் போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் சுமார் 200 பேர் திரண்டு விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் அனுமதி வழங்கினர். இதனையடுத்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

▶️ கூத்தனூர் மகா சரஸ்வதி அம்மன் கோயில்
▶️ திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் கோயில்
▶️ வடுவூர் அழகு சுந்தரி அம்மன் கோயில்
▶️ வலங்கைமான் பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோயில்
▶️ ஆலத்தம்பாடி பிடாரியம்மன் கோயில்
▶️ எண்கன் மகாமாரியம்மன் கோயில்
▶️ பரவாக்கோட்டை தைலத்தம்மன் கோயில்
உங்கள் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களை கமெண்ட் பண்ணுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க!

திருவாரூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

திருவாரூர் மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் <

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <

நன்னிலம் அருகே சொரக்குடி, மூங்கில்குடி, விசலூர், காக்கா கோட்டூர் பகுதிகளில் நேற்று காலை ஒரு விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்தது. மேலும் மிகவும் தாழ்வாக தென்னை மரங்களை தொட்டுச் செல்லும் அளவிற்கு பறந்ததால் பலத்த சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனை அடுத்து, தாழ்வாகப் பறந்தது பயிற்சி விமானம் என்பது தெரிய வந்தது.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு எழுத விருப்பமுள்ள நபர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருவாரூரில் இம்மாதம் 20-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்களுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.