Thiruvarur

News May 29, 2024

தாலுகா வாரியாக கற்போர் எண்ணிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தாலுகா வாரியாக கற்போர் எண்ணிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. வலங்கைமான்-582, குடவாசல்-784, கொரடாச்சேரி-610, நன்னிலம்-441, திருவாரூர்-491, மன்னார்குடி-832, நீடாமங்கலம்-701, கோட்டூர்-709, திருத்துறைப்பூண்டி -465, முத்துப்பேட்டை -592,
மொத்தம் – 6207 பேர் இத்திட்டத்தில் கற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

image

கூத்தாநல்லூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்அறிவித்த சட்ட கூலியை வழங்கிடகோரி நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மே 29, 30 தேதிகளில் கூத்தாநல்லூர் நகராட்சி ஒப்பந்தபணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது என்றும், மே 31 காலை10 மணிக்கு நகராட்சி அலுவலகம் எதிரில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

News May 29, 2024

மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று (28.05.2024) திடீர் ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வாளர் மற்றும் பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

News May 28, 2024

திருவாரூர் தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி

image

திருவாரூர் தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் தேரோட்டத்தின் போது அடியோடு நகர்த்தி வேறு இடத்தில் வைத்து திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் மூடும் வகையில் புதிய வடிவமைப்பில் கோயில் நிர்வாகம் சார்பில் உபயதாரர் மூலம் ரூ 19 லட்சம் செலவில் பைபர் கண்ணாடியுடன் கூடிய கூண்டு அமைக்கப்பட்டுள்ளது

News May 28, 2024

திருவாரூர் மகா சரஸ்வதியம்மன் கோயில் சிறப்பு!

image

திருவாரூரில், பூந்தோட்டம் என்ற ஊரின் அருகேயுள்ள கூத்தனூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மகா சரஸ்வதி அம்மன் கோயில். இக்கோயில் சரஸ்வதிக்கு என தென்னிந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற ஒரே கோவிலாகும். பழம்பெரும் தமிழ்க்கவி ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் இந்த கூத்தனூர். கோயிலின் முன்புறம் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது.

News May 28, 2024

திருவாரூர்: விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை awards.gov.in/ என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை அதே முகவரியிலேயே மே 31க்குள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 27, 2024

வலங்கைமான்: மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

image

திருவாரூர், வலங்கைமான் வெட்டாற்றில் மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று(மே 26) போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, மணல் திருட்டில் ஈடுபட்ட பாடகச்சேரியை சேர்ந்த முத்துராமன் மற்றும் மற்றொரு பகுதியில் திருட்டில் ஈடுபட்ட ஊத்துக்காட்டை சேர்ந்த ராஜசேகரன் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். 2 லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

News May 26, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்கிற இணைய தளத்தில் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News May 26, 2024

திருவாரூரில் நெல் திருவிழா

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் நெல் ஜெயராமன் ஆராய்ச்சி மையம் சார்பில் ஜூன் 22 ஆம் தேதி திருத்துறைப்பூண்டி தனியார் அரங்கில் தேசிய நெல் திருவிழா நடைபெற உள்ள நிலையில். இந்த நிகழ்வில் பங்கெடுப்பதற்காக நெல் ஜெயராமன் பண்ணை தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ் மாவட்ட எஸ்பி-யை நேரில் சந்தித்து நேற்று அழைப்பிதழ் வழங்கினார்.

News May 25, 2024

காத்தவராயன் சாமியை தூக்கி தீ மிதித்த பக்தர்கள்

image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடத்தில் விழா இன்று நடைபெற்றது. காத்தவராயன் சுவாமியை தூக்கிக்கொண்டு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!