India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ்வழிக்கல்வி பயின்று, 2024-2025-ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பு சேரும் அனைத்து மாணவிகளும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற்று பயனடையலாம். இத்திட்டத்துக்கு தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரியில் அசோகன் என்பவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருத்துறைப்பூண்டிக்கு உறவினர் வீட்டு நிச்சயதார்த்தற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டை உடைத்து வீட்டில் இருந்த யாரோ மர்ம நபர்கள் 2ஆயிரம் ரொக்கம், காமாட்சி விளக்கு, சந்தன பேலா, குங்கும சிமில் ஆகியவை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள திருச்சிறுகுடி கிராமத்தில் மங்களாம்பிகை சமேத சூட்சமபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கென்று தனி சன்னதி உள்ளது இக் கோயிலில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது மகன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர் இந்நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் சித்தமல்லி பகுதியில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி செல்வராஜ் அவர்களுடைய படதிறப்பு நாளை(மே.31) சித்தமல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உறவினர்கள் குடும்பத்தினர்கள் பங்கு பெற உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தாலுகா வாரியாக கற்போர் எண்ணிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. வலங்கைமான்-582, குடவாசல்-784, கொரடாச்சேரி-610, நன்னிலம்-441, திருவாரூர்-491, மன்னார்குடி-832, நீடாமங்கலம்-701, கோட்டூர்-709, திருத்துறைப்பூண்டி -465, முத்துப்பேட்டை -592,
மொத்தம் – 6207 பேர் இத்திட்டத்தில் கற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்அறிவித்த சட்ட கூலியை வழங்கிடகோரி நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மே 29, 30 தேதிகளில் கூத்தாநல்லூர் நகராட்சி ஒப்பந்தபணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது என்றும், மே 31 காலை10 மணிக்கு நகராட்சி அலுவலகம் எதிரில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று (28.05.2024) திடீர் ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வாளர் மற்றும் பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
திருவாரூர் தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் தேரோட்டத்தின் போது அடியோடு நகர்த்தி வேறு இடத்தில் வைத்து திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் மூடும் வகையில் புதிய வடிவமைப்பில் கோயில் நிர்வாகம் சார்பில் உபயதாரர் மூலம் ரூ 19 லட்சம் செலவில் பைபர் கண்ணாடியுடன் கூடிய கூண்டு அமைக்கப்பட்டுள்ளது
திருவாரூரில், பூந்தோட்டம் என்ற ஊரின் அருகேயுள்ள கூத்தனூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மகா சரஸ்வதி அம்மன் கோயில். இக்கோயில் சரஸ்வதிக்கு என தென்னிந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற ஒரே கோவிலாகும். பழம்பெரும் தமிழ்க்கவி ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் இந்த கூத்தனூர். கோயிலின் முன்புறம் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது.
திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை awards.gov.in/ என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை அதே முகவரியிலேயே மே 31க்குள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.