India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச நீட் (NEET) போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏப்.03 முதல் மே.02 வரை புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்களுக்கு 9843545343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!
திருவாரூரில் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு குறைபாடுகள் இருப்பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். அதன்படி திருவாரூர் 7402607529, நன்னிலம் 7402607533, குடவாசல் 7402607538, கொரடாச்சேரி 7402607442, வலங்கைமான் 7402607566, மன்னார்குடி 7402607554 உள்ளிட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். (SHARE பண்ணவும்)
திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மே.30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகை விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அல்லது https://tnvelaivaaippu.gov.in/download என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணைப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
திருவாரூர் ஹாக்கி யூனிட், ASM ஹாக்கி கிளப் மற்றும் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல் நிலைப் பள்ளி இணைந்து நடத்தும்
மாணவர்களுக்கான கோடைக்கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம்
27.04.2025 முதல் 18.05.2025 வரை திருவாரூர் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் 7 முதல்18 வயது வரை உள்ள
மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது
பயிற்சி நிறைவில் சான்றிதழ் உண்டு தொடர்பிற்கு:8940266129
திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி ஆழி தேரோட்டம் நடைபெறுவதால் தேரை அலங்கரிக்கும் பணி மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் திருவாரூர் ஆழி தேரை காண்பதற்கு மிக ஆவலுடன் உள்ளனர். தேரை சுற்றி வருவதற்கு நான்கு வீதிகளும் இடையூறு இல்லாமல் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர் திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட இருக்கிறது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஏப்.5-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:30 மணியளவில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ”அடுத்த இலக்கு” எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாணவர்களுக்கு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று திடீரென கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே நாளில் நடக்க இருக்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் BRANCH MANAGER பணிக்கான 25 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 -ரூ.25,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <
சென்னையில் இருந்து செங்கல்பட்டு விழுப்புரம் வழியாக வண்டி எண் 16103 -16104 ராமேஸ்வரம் தாம்பரம் இடையே தினசரி விரைவு ரயில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஞாயிறு முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ராமேஸ்வரம் மானாமதுரை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடையும்.
Sorry, no posts matched your criteria.