India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எடையூர் காவல் சரகம் பின்னத்தூர் ECR சாலை வளைவில் அருகே இன்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி தெரிந்தால் முத்துப்பேட்டை டிஎஸ்பி அலுவலகம் 9498100897, காவல் நிலையம் 9498100899, சப்இன்ஸ்பெக்டர் சதிஷ் 9003952291 ஆகிய எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் என போலீசார் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் புத்தக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் இதில் புத்தாக்க மேம்பாட்டு திட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
தெற்குமாங்குடியை சேர்ந்த வள்ளியப்பன் நேற்று மாலை கொரடாச்சேரியிலிருந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் அப்போது திருவாரூர் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கொரடாச்சேரி செல்லும் சாலையில் திரும்பிய போது எதிரே வந்த டிராக்டர் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் தடுமாறி கீழே விழுந்த வள்ளியப்பன் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.டிராக்டர் ஓட்டுநர் வீரையனை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர், முத்துப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் காரைத்திடல், கோவிலூர்,உப்பூர், பகுதிகளில் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் நிலவியது .கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முத்துப்பேட்டை அருகே ஜாம்புபனோடை தடுப்பணை,வீரன்வயல் பாமணி ஆறு பகுதிகளில் உள்ள தடுப்பணை மதக்குகள் திறந்தனர். கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்து. இதனால், இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூர் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல்கள் 24 மணி நேரமும் செயல்படும் திருவாரூர் மாவட்ட கட்டுப்பாடு அறை எண் 1077 என்ற எண்ணிலும் அல்லது 04366 226623 என்ற எண்ணிலும் தகவல்கள் தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாருர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க எஸ்.பி. தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 14 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 28 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மது விற்பனையில் ஈடுபட்ட 27 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 12 பேர் மற்றும் குண்டர் சட்டத்தில் ஒருவர் என 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ஜனசக்தி சந்தா வழங்கும் சிறப்பு கூட்டம் திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவி தேவை படுவோர் திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக எண் 94981 00865 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அலுவலக கூட்ட அரங்கில் (14-10.2024) இன்று இரவு 9.45 மணி அளவில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.