Thiruvarur

News August 17, 2024

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது

image

மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பூரணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். இதில் ஒருவருக்கு பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ 12ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ் கையும் களவுமாக பிடிப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

News August 16, 2024

திருவாரூர் எஸ்பி நேரில் ஆய்வு

image

நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடி மனோ நிர்மல் ராஜை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் காயம் அடைந்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட காவலர் விக்னேஷ் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றிரவு திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் உடல்நிலை குறித்து விசாரணை நடத்தி ஆறுதல் கூறினார். அப்போது காவல் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

News August 16, 2024

திருவாரூரில் ரவுடி சுட்டுப் பிடித்த உதவி ஆய்வாளார்.

image

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரவுடியை காவல் ஆய்வாளர் சுட்டுப் பிடித்தார். ஆதனூர் கிராமத்தில் காவலர் விக்னேஷை வெட்டி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி மனோ நிர்மல்ராஜை, காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் துப்பக்கியால் சுட்டு ரவுடியை பிடித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News August 16, 2024

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

image

நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சக நண்பர்களோடு பள்ளி அருகே உள்ள மகா ராஜபுரம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆற்றில் நீரின் சுழற்சியில் சிக்கினார். பின்னர் மாணவனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

News August 16, 2024

கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

வடபாதிமங்கலம் அருகே கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையற்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜெகதீசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

News August 16, 2024

திருவாரூரில் டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பி ஆக இருந்த சரவணகுமார் சென்னை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும், திருவாரூர் மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த பாஸ்கரன் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி ஆகவும், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி ஆக இருந்த சோமசுந்தரம் தஞ்சை நகர டிஎஸ்பி ஆகவும் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

News August 16, 2024

திருவாரூரில் பரவும் வதந்தி SHARE பண்ணுங்க

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமை தொகை பெறுவது தொடர்பான முகாம் நடைபெறுவதாக போலியான தகவல்கள் பரவி வருகிறது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. எனவே, பொது மக்கள் யாரும் இந்த செய்தியை நம்ப வேண்டாம். இதை SHARE செய்யவும்.

News August 16, 2024

திருவாரூர் மாவட்ட தொழில் முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பு

image

தஞ்சாவூரில் வருகின்ற ஆக.19 முதல் செப்.6 வரை தொழில் முதலீடு தொடர்பான MSME முகாம் நடைபெற உள்ளது. தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். முகாம் நாட்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தால் ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் துவங்குவதற்கான கடன் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

News August 16, 2024

திருவாரூரில் மகளிர் உரிமை தொகை பெற சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையை இதுவரை பெறாதவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட்.17 (சனிக்கிழமை) முதல் ஆகஸ்ட்.20 (செவ்வாய்க்கிழமை) வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்கலாம்

image

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம் பெருமக்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாகவும் அல்லது ‘HAJ SUVIDHA’ செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் செப்டம்பர் 09.09.24 (திங்கட்கிழமை) என திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை தலைவர் தெரிவித்துள்ளார். SHARE NOW!

error: Content is protected !!