Thiruvarur

News August 19, 2024

திருவாரூர்: கோயில் திருவிழாவில் தகராறு

image

நீடாமங்கலம் ஆலங்குடி பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் ஆலயம் எம் குலம் பகுதியில் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சனை நிலவி வருகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்வில் ஒரு தரப்பினர் காவல் துறை பாதுகாப்புடன் தரிசனத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

News August 19, 2024

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பெண் கைது

image

திருத்துறைப்பூண்டி காமராஜ் தெருவை சேர்ந்தவர் யோகாம்பிகை. திருத்துறைப்பூண்டி பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்த நிலையில், கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரைத்தார். ஆட்சியரின் உத்தரவின்படி நேற்று திருச்சி மத்திய சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

News August 19, 2024

திருவாரூர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்ட ஆறுகளில் அதிகளவு தண்ணீர் ஓடுவதால் சிறுவர்களை குளிக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். காவிரி நீர் ஆற்றில் அதிகமாக செல்வதால்; வெண்ணாறு, பாமணி ஆறு, கோரையாறு, வெட்டாறு ஆகிய ஆறுகளில் குளிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

News August 18, 2024

திருவாரூரில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய எஸ்பி

image

திருவாரூரில் ஸ்ரீ ராம் இலக்கியக் கழகம் மற்றும் புதுயுகம் தொலைக்காட்சி இணைந்து நடத்திய திருக்குறள் விழா இன்று (18-08-2024) சாய்ராம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

News August 18, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது திருவாரூர் மாவட்டத்தில் மாலை 5 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 18, 2024

திருவாரூரில் சர்வதேச திரைப்பட விழா

image

திருவாரூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை தைலம்மை திரையரங்கில் சர்வதேச திரைப்பட விழா லோகோ வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் கொள்ளு பேரன் கொள்ளுப்பேத்தி திருவாரூரில் வசிப்பதை அறிந்து அவர்களை மேடையில் அறிமுகப்படுத்தி பாராட்டி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

News August 18, 2024

நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடல்

image

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக 3 நாட்களுக்கு இரவில் கேட்மூடப்படுகிறது. அதன்படி, இன்று முதல் ஆக.20ஆம் தேதி வரை இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும். எனவே, பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News August 18, 2024

மன்னார்குடியில் மீன்கள் விலை நிலவரம்

image

மன்னார்குடியில் இன்றைய மீன்கள் விலை நிலவரம் வெளியானது. கடல் மீன்களான கிளங்கா ரூ. 200, சங்கரா ரூ.350, நண்டு ரூ.350, இறால் ரூ.400, மத்தி ரூ.150, பாறை ரூ.500, வஞ்சிரம் ரூ.700, கிளிகொடுவா ரூ.400, மதனகொடுவா ரூ.300, கானாங்கெளுத்தி ரூ.200க்கு விற்பனையானது. உள்ளூர் மீன்களான உயிர் கெண்டை ரூ.200, ஐஸ் கெண்டை ரூ.160, பாப்பு கெண்டை ரூ.160, விரால் ரூ.400 – ரூ.600க்கும் விற்பனையாகிறது.

News August 17, 2024

பயங்கர ஆயுதங்களுடன் 5பேர் கைது

image

நீடாமங்கலம் பூவனூர் ராஜ்குமார் கொலைக்கு பழி தீர்க்க, பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி இன்று நீடாமங்கலம் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று கூடியிருந்த தென்னரசு (எ) தனுஷ்கர், தயா (எ) தயாநிதிமாறன், ஷியாம், ஆகாஷ் (எ) பிரேம்குமார், மாணிக்கம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 17, 2024

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருவாரூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

error: Content is protected !!