Thiruvarur

News August 22, 2024

திருவாரூர் அருகே கலெக்டர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம் அரிச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுபத்திரயம் களிமங்கலம் இணைப்பு சாலையில் வெள்ளையாற்றின் குறுக்கே சுமார் ரூ.395.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் இருந்தனர்.

News August 22, 2024

திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

image

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுவை மறு கட்டமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி வரும் 24.08.2024 அன்று அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்திட அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

News August 21, 2024

திருவாரூரில் காவல் துறை கலந்தாய்வு கூட்டம்

image

திருவாரூர் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான வாராந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. விரைவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட இருப்பதால், விநாயகர் சிலைகள் அமைக்கும் இடங்கள் குறித்தும், ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகள் குறித்தும், காவல் துறையின் உரிய அனுமதி தர அறிவுரை வழங்கினார்.

News August 21, 2024

மழையூர் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

image

திருவாரூரில் உள்ள பள்ளிகளில் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் அலுவலர் ஆகியோர் மாதம் தோறும் பார்வையிட்டு ஆய்வு செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று கொரடாச்சேரி, அத்திசோழமங்கலம் ஊராட்சியில் உள்ள மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் பார்வையிட்டு, மாணவர்களின் வாசிப்பு திறன், பள்ளியின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

News August 21, 2024

திருவாரூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பாலையூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2024

திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

image

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் ஆணையம் உத்தரவு படி மாவட்டத்தில் வரும் செப்.1ஆம் தேதி முதல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் தரமான புகைப்படம் மாற்றுதல் ஆகியவை இன்று முதல் மேற்கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 21, 2024

திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை

image

திருவாரூரில் தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படவுள்ளன. ஆக.25ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், இந்த போட்டிகளை நடத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என இளைஞர் நல விளையாட்டு மேம்பாட்டு குழு அறிவித்துள்ளது.

News August 20, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கலைத் திருவிழா அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் கலை திருவிழா 2024- 25 அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 1-8 வகுப்பு மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டியில் பங்குபெறும் மாணவர்களை 19.08.2024 முதல் 21.08.2024 வரை EMIS பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 21.08.2024 பிறகு பள்ளி அளவில் பதிவேற்றம் செய்ய இயலாது ஆகையால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 20, 2024

திருவாரூரில் பெண் கொலை குறித்து எஸ்.பி பேட்டி

image

திருவாரூர் மாவட்டம் பவுத்திரம் மாணிக்கம் பகுதியில் 18ஆம் தேதி அன்று பிரபாவதி என்ற பெண்ணின் கழுத்தை அறுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்று சந்தோஷ் என்று 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகை பணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

News August 20, 2024

திருவாரூரில் பெண் கொலை – 2 பேர் கைது

image

திருவாரூர் அருகே இலவங்கார்குடி பகுதியில் நேற்று இரவு பிரபாவதி (40) என்ற பெண்மணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் சந்தோஷ் (25) அவரது சகோதரர் சஞ்சய் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரிடம் இருந்து பிரபாவதியின் செல்போன் மற்றும் தாலி செயின் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!