Thiruvallur

News October 9, 2024

துணை முதலமைச்சருக்கு செங்கோல் வழங்கிய அமைச்சர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் கலந்துக் கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைதந்தார். இவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் செங்கோல் வழங்கி வரவேற்றார்.இதில் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என கலந்துக்கொண்டனர்.

News October 9, 2024

கும்மிடிப்பூண்டியில் காவலர் கைது

image

கும்மிடிப்பூண்டி எளாவூர் சோதனைச்சாவடியில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காவலர் கைது செய்யப்பட்டார். பழனி 14ஆவது பட்டாலியனில் பணியாற்றி வரும் பிரகாஷ் கஞ்சா கடத்தல்காரர்களுக்கு ரூ.2 லட்சம் தந்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில் சிறப்பு படை காவலரை கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

News October 9, 2024

பூந்தமல்லி, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்

image

ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை பூந்தமல்லி, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

News October 9, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு பரவலாக மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 8, 2024

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க நடப்பு சம்பா பருவம் 2024-25 பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு நவ.15 ஆம் தேதிக்குள் கடன் பெறும், கடன் பெறா விவசாயிகள் விருப்பத்தின் பேரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மைங்களிலும் காப்பீடு செய்துகொள்ளலாம் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

News October 8, 2024

திருத்தணி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

image

திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்கு இவர்களுக்கு சாலை வசதி, குடிநீர், கழிவுநீர் கால்வாய், குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் மூலம் செய்து வருகிறது. இதற்காக குடியிருப்பு வாசிகளுக்கு வரி விதிக்கப்படுகிறது. அக்டோபர் 31-க்குள் வரி செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அறிவிப்பு

News October 8, 2024

திருவள்ளூர் அருகே மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

image

சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம் பணிமனையில் ஆவடியிலிருந்து வரும் 10, 11 ஆகிய தேதிகளில் காலை 3 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும், பட்டாபிராமில் இருந்து வரும் 9, 10 ஆகிய தேதிகளில் இரவு 9.50, 11.50 ஆகிய நேரங்களில் ஆவடி புறப்பட்டு செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.இரவு நேரங்களிலும் மூன்று இரயில்கள் பகுதி நேரம் ரத்து என அறிவிப்பு

News October 8, 2024

குறைத்திருக்க நாள் கூட்டத்தில் 413 மனுக்கள் பெறபட்டது

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்க நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது பல்வேறு பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் வேலை வாய்ப்பு கடன் உதவி பசுமை வீடு புதிய ரேஷன் கார்டு வீட்டு மனைபட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வலியுறுத்தி 413 மனுக்கள் அளித்தனர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News October 7, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!