Thiruvallur

News January 8, 2025

மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

image

வரதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரி ( 26 ), இவர் நேற்று வீட்டின் மாடிக்கு சென்று இரும்பு கம்பியை கொண்டு எலுமிச்சை பழங்களை பறிக்க முயன்றார். அப்போது மின் கம்பியில் அவர் கையில் வைத்திருந்த கம்பி பட்டு மின்சாரம் தாக்கியது. இதை கண்ட அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் லோகேஸ்வரியை ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

News January 7, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 7, 2025

குறைதீர்க்கும் கூட்டத்தில் 366 மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 366 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.

News January 7, 2025

திருவாலங்காடு பகுதியில் சாலை விபத்தில் இருவர் பலி

image

திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று  பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த சாம்குமார் என்ற இளைஞர் தனது வாகனம் ஓட்டி வந்த போது திடீரென நிலை தடுமாறி ரோட்டில் நடந்து சென்ற கூலி தொழிலாளி ராஜகோபால் மீது மோதியது இந்த விபத்தில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 7, 2025

மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறை

image

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். உடன் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இணை, துணை இயக்குநர்கள் இருந்தனர்.

News January 7, 2025

மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறை

image

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். உடன் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இணை, துணை இயக்குநர்கள் இருந்தனர்.

News January 6, 2025

திருவள்ளூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது, மாவட்ட அலுவலர் இராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News January 6, 2025

ஆவடி அருகே இளைஞர் வெட்டி படுகொலை

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தினேஷ் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தினேஷ் சரித்திர பதிவேடு குற்றவாளி என போலீசார் கூறியுள்ளனர். தினேஷை கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாக தினேஷ் கொல்லப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News January 5, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 5, 2025

அண்ணா மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்

image

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா மராத்தான் போட்டியை இன்று காலை அமைச்சர் ஆவடி நாசர் கொடியாசித்து தொடங்கி வைத்தார். உடன், திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் பொன்னேரி  சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!