India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஸ்ரீ சித்திபுத்தி உடனுறை ஸ்ரீ ஞான சுந்தர விநாயகர் கோயிலில் வெங்கடேசப் பெருமாள் சன்னதியில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு திருமஞ்சனம் செய்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருவள்ளூர் நகரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராக பெருமாள் கோயிலில் இன்று காலை பக்தர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு தனூர் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.01.2025) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபு சங்கர் அவர்கள் தலைமையில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட பணிகள் தொடர்பாகவும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார் ,பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09:01,2025) சட்ட ஒழுங்கு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம். போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் கலந்து கொண்டார்.
பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் வர்மன் (25) பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் பகுதிக்கு வசூல் செய்ய சென்றபோது அடையாளம் தெரியாத 3பேர் வழிமறித்து கல்லால் தாக்கியதில் காயம் அடைந்த மனோஜ் வர்மன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு புகாரின் பேரில் அடையாளம் தெரியாதமூன்று பேரை பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளாஸ்திரியிலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பஸ் ஒன்றில் சோதனை செய்த 10 கிலோ குட்கா பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appஇல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளூர் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <
Sorry, no posts matched your criteria.