India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
பூந்தமல்லியில் உள்ள ஹோட்டல் ஹைவே நிகழ்ச்சி அரங்கத்தில் இன்று திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் பலத்த கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. காலை 6 மணி முதல இன்று காலை 6 மணி வரை நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 7செ.மீ ஊத்துக்கோட்டை 6 செ.மீ. மழை பதிவானது. கும்மிடிப்பூண்டி 5 செ.மீ தாமரைபக்கத்தில் பகுதியில் 3 செ.மீ. மழை சோழவரத்தில் 2செ.மீ பதிவாகியுள்ளது. பதிவானது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருத்தணி பொதுப்பணித்துறை நீர்வள உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் ரமேஷ் ஆர்கே பேட்டை சேர்ந்த விவசாயிடம் ஏரியில் உள்ள மண்ணை விவசாய நிலத்திற்கு எடுக்க அனுமதி கேட்டதற்கு ரூ 7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுத்தலின் பேரில் ரூ 7 ஆயிரம் லஞ்சம் தரும் போது கையும் களமாக பிடித்து உதவி செயற்பொறியாளர் ரமேஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் எம்.பி. தனது சமூக வலைத்தளத்தில் ஆளுநர் ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது ‘திராவிட நல் திரு நாடும்’ என்ற வார்த்தையை தவிர்த்துள்ளார். ‘சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடும்’ என்று நினைக்கிறார் போல இதுபோன்ற செயல்களால் தமிழின் பெருமையையும் திராவிடத்தின் வரலாற்றையும் மறைத்துவிட முடியாது என்பதை ஆளுநர் உணரவேண்டும் என பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமான மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. எனவே பொதுமக்கள் நீர்நிலை பகுதிகளில் செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது என திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் சென்னை தேசிய நெடுஞ்சாலை 716 சாலை பணிக்காக விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கான இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து இன்று மருத்துவக் கல்லூரி முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இழப்பீடு தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். நேற்று பகல் நேரங்களில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு முதல் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. அம்பத்தூர் ஆவடி , மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை மற்றும் ரெயின் கோர்ட் கொண்டு செல்ல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.