Thiruvallur

News November 24, 2024

கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபமாக பலியான குழந்தை

image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்ட பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென புரை ஏறியதால், மூச்சுத்திணறி 3 வயது குழந்தை உயிரிழந்தது. குருவராக கண்டிகையை சேர்ந்த குழந்தை வெங்கடலட்சுமி தேகலா உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News November 24, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 24, 2024

சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

image

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

News November 24, 2024

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

News November 24, 2024

சாதனை படைத்த திருவள்ளூர் மாவட்டம்

image

தமிழகத்தில் பிரசவ காலங்களில் பெண்களும், பிரசவித்த பின்பு குழந்தைகளும் உயிரிழக்கும் நிகழ்வுகள் பெரிதும் குறைந்துள்ளது.மாநில அளவில் பிரசவ கால பெண்கள் உயிரிழப்பு மற்றும் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு பெரிதும் குறைக்கப்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் உருவெடுத்துள்ளது. குழந்தை இறப்பு மாநில அளவில் 1,000 பிறப்புகளில் 7.7 ஆகவும், திருவள்ளூரில் 5.7 ஆகவும் பதிவாகியுள்ளது.

News November 23, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

திருவள்ளூர்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (இரு சக்கர வாகனம் ஓட்டும்போது இருவருமே ஹெல்மெட் அணிவது அவசியம் மட்டுமல்ல அது உயிர் காக்கும் கவசமும் கூட..) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 23, 2024

திருவள்ளூரில் மறைமுகமாக சாடிய முன்னாள் அமைச்சர்

image

திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்த கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அளித்த பேட்டியில், அதிமுகதான் என்றுமே தொடர்ந்து நிலைத்து நிற்கும். 2026 தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவார். புதியதாக கட்சி ஆரம்பித்தவர்கள் விரைவில் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

News November 23, 2024

திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 28 ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 27-ஆம் தேதி திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 22, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!