India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 மணிநேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடைய கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ( நவ.30) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று (நவ.29) வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியான நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக விடுமுறை இல்லை என்று தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்கள் நவ.27ஆம் தேதி முதல் டிச.6ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில், மழையின் காரணமாகவும், நிர்வாக காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் பாடகி இசைவாணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட இந்து முன்னணி மற்றும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு குழு சேர்ந்த ஐயப்ப பக்தர்களும், இந்து முன்னணி பொறுப்பாளர்களும் இந்த புகாரை அளித்துள்ளனர். ஐயப்பனையும், மாலை அணிந்து விரதத்தை கடைபிடித்து வரும் ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.