India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும், சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பரும் கைதாகினர். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியை சார்ந்த மாவட்டத் தலைவர் சபரீஷ் தலைமையில் 200 பேர் அக்கட்சியில் இருந்து விலகி இன்று காலையில் திமுக ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அனைவருக்கும் அமைச்சர் நாசர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் டிச.6 ஆம்தேதி ஏலம் விடப்பட்டது. தொடர்ந்து வரும் டிச.19 ஆம் தேதியில் காலை 10 மணிக்கு எஸ்.பி அலுவலகத்தில் உள்ள ஆயுத படை மைதானத்தில் மீண்டும் ஏலம் விடப்படுகிறது. பங்கேற்பவர்கள் ஆதார் கார்டு முன்பணம் கொண்டு வர வேண்டுமென்று காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் 6.12.24 ஏலம் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக வரும் 19டிசம்பர் தேதியில் மீண்டும் ஏலம் விடப்படுகிறது. பங்கேற்பவர்கள் ஆதார் கார்டு முன்பணம் கொண்டு வர வேண்டுமென்று காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் மழையால் பாதித்த இடங்களுக்கு சென்று பாதிப்புகள் பற்றி கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், 100 நாள் வேலை ஆட்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து உணவு பொருட்கள் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்ந்த 143 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் நாசர் உணவுகள் பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
Sorry, no posts matched your criteria.