India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட நீதித்துறையில் 106 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம், எம்.ஜி.ஆர். நகர் அருகேயுள்ள புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலயத்தில் இருந்த உண்டியலை சிலர் மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் உண்டியலை உடைக்க முடியாததால் ஆத்திரமடைந்த திருடர்கள் மாதா சிலையின் மீது பெரிய கல்லை வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு (ம) சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் வாழை தோட்டம் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதியிலிருந்து திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம், வாழை இலை, பழம் உள்ளிட்டவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக வாழை செடிகள் காய்ந்து இலைகள் கருகி வருவதால் வாழைப்பழம், இலை ஆகியவற்றின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
ஆவடி அடுத்த மிட்டனமல்லியில் நேற்றிரவு முன்னாள் ராணுவ வீரரும், அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தற்போது செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மிட்டனமல்லியில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் சிவன் நாயர் (68), அவரது மனைவி பிரசன்னா (63) ஆகியோர் நேற்று வீடு புதுந்து கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை அவரது வீட்டிற்கு சிகிச்சை பார்ப்பது போல் வந்த நபர்கள் இருவரையும் கொடூரமாக கொலை செய்து தப்பித்தனர். தடையங்களை சேகரித்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழவேற்காடு, கடற்கரை பகுதியில் ஆழ்கடலில் வசிக்கும் ஆமை வகைகளில் ஒன்றான ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – மார்ச் மாதம் வரை கடற்கரைக்கு வந்து முட்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனிடையே பழவேற்காடு வனத்துறையினர் கடந்த டிசம்பர் முதல் மார்ச் 15-ந் தேதி வரை 11,786 முட்டைகளை சேகரித்து பாதுகாத்தனர். அதில் குஞ்சு பொறித்த 9,418 ஆமைகளை நேற்று மாலை கடற்கரையில் விடுவித்தனர்.
மீஞ்சூர் காந்தி ரோடு வசந்த் & கோ அருகே துணி சுற்ற பட்ட நிலையில் கை தனியாக வெட்டப்பட்டு நடு ரோட்டில் கிடப்பதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விசாரித்ததில் பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்
திருவள்ளூர் அருகே கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (70), அதே பகுதியில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பணிக்கு வந்த செல்வம் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது உறவினர்கள் இன்று காலையில் சென்று பார்த்தபோது அவர் தலை பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கீழச்சேரி அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து மப்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னேரியில்
அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கரி கிருஷ்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது
ஐந்தாம் நாள் உற்சவமாக நாச்சியார் இன்று ஊஞ்சல் ஊர்வலமும் இரவு கருட வாகனத்தில் பெருமாள் வலம் வந்து அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்வு இன்று இரவு நடைபெறுகிறது பிரம்மோற்சவ சந்திப்பு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.