India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.முதலில் <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள செய்தியில் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள். இந்த தமிழர் திருநாளில், அனைத்து விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கையும் வளமும் பொங்கிப் பெருகட்டும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் விவேகானந் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழவும் அறிவுறுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க காஞ்சிபுரம் மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கும்மிடிப்பூண்டியில், யுவராஜ் என்பவர் ATM-ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவரை அணுகிய 3 வடமாநில நபர்கள், உதவி செய்வது போல நடித்து ATM-ல் பணமில்லை என தெரிவித்து வேறு ATM கார்டை கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் அவர் சென்றதும், அதே ATM கார்டை வைத்து ரூ.43,000 வரை எடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் போர்வை விற்பனையாளர்கள் மூவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் 90 கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்: செங்குன்றத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (25), அசோக்குமாருக்கும் (26) 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது முன்னால் சென்ற ஆட்டோ திடீர் பிரேக் போட்டதால், நிலைதடுமாறி வைஷ்ணவி கீழே விழுந்தார். அதேசமயம் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதால், அசோக்குமார் கண் முன்னே அவர் தலை நசுங்கி பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு Artificial Limbs Manufacturing corporation of India, (ALIMCO) Auxiliary production Centre வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீட்டு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் முகாம் நடைபெறும் விவரங்களை மேலே உள்ளதை படித்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.