India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்னேரி தேவமாநகரை சேர்ந்தவர் வினோத்-அன்னலட்சுமி. இவர்களது மகன் காசிக் ராஜேந்திரா (4) தனியார் பள்ளியில் யுகேஜி படித்துவந்த நிலையில், தனது அறிவுத்திறனை பயன்படுத்தி கவிஞர்கள் எழுதிய 70 கவிதைகளின் பெயர்கள், 27 விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பெயர்கள், 50 நாடுகள் அவற்றின் நாணயங்கள் உள்ளிட்ட 213 கேள்விகளுக்கு பதில் அளித்து ட்ரம்ப் வேர்ல்ட் ரெக்கார்ட் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பூந்தமல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் ராதா தலைமையில் போலீசார், ஈரோடு மாவட்டம், குமரபாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (23), தேவரங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (21), நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் (23) ஆகிய 3 பேரை கைது செய்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லியில் இருந்து நேற்று மதியம் காஞ்சீபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று நசரத்பேட்டை அருகே திடீரென பிரேக் போட்டதால் பேருந்து படியில் நின்று கொண்டிருந்த நடத்துனர் முருகன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் சகாதேவன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம் இவரது கணவர் சேகர் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மகன் நவீன் என்பவர் உடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டின் வெளியே தூங்கிய கற்பகம் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள குட்டையின் அருகே எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.
கீழ் நல்லாத்தூரில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் பசுபதியின் வீட்டிற்கு ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் போலீசார் சென்று அவரை கைதுசெய்தனர். திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பசுபதியை அடைத்துவைத்துள்ளனர். வடலூர் மெய்ஞானபுரம் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கைதுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புழல் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (மே 4) காலை 9 மணி முதல் 12 மணிவரை புழல், சூரப்பட்டு, விநாயகபுரம், செங்குன்றம் புழல் சிறைச்சாலை மற்றும் குடியிருப்பு பகுதி, நாகப்பா எஸ்டேட், காவாங்கரை, காந்திசாலை, சக்திவேல் நகர், கண்ணப்ப சாமி நகர், மகாவீர் கார்டன், திருநீலகண்டன் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என மின்சாரத்துறை அறிவித்துள்ளது.
ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை கிருஷ்ணா நகை கடையில் ஏப்.16ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட 2.5 கிலோ தங்கத்தில் 700 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 8 குற்றவாளிகளில் 4 பேர் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருவதாக ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (27). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவரிடம் கடன் தவணை தருவதாக திருவள்ளூர் அடுத்த ICMR பகுதிக்கு வர வைத்து முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பியுள்ளது. ஆபத்தான நிலையில் அஜித் குமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.