Thiruvallur

News January 19, 2026

கும்மிடிப்பூண்டியில் விவசாயி பலி!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே உமிப்பேடு கிராம் விவசாயி துரைவேலு (40) கடந்த ஜன.17ஆம் தேதி கும்மிடிப்பூண்டி சென்று மீண்டும் உமிப்பேடு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த ஆட்டோ, பைக் மோதியதில் துரைவேலு பலத்த காயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஜன.18) உயிரிழந்தார்.

News January 19, 2026

திருவள்ளூர் மக்களே இலவச WIFI வேண்டுமா?

image

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த <<>>லிங்க் மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

திருவள்ளூர்: புழல், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜெஷ்(40). பூ வியாபாரியான இவர், புழல் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு அவர் மீது மோதிய வேன் டிரைவரான செந்தில் குமார்56) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 19, 2026

திருவள்ளூரில் பவர் கட்!

image

கோயில்பதாகை பகுதியில் உள்ள முல்லை நகர், வளர்மதி நகர், எட்டியம்மன் நகர், ஜே.ஏ.கே நகர் மற்றும் சரஸ்வதி நகர், தண்டுரை பகுதியில் உள்ள வள்ளலார் நகர், பாலாஜி நகர், சி.டி.எச் சாலை, மாசிலாமணி நகர், திருமுல்லைவாயல், தென்றல் நகர், லெனின் நகர், சோழம்பேடு பிரதான சாலை, தண்டலம், வெங்கல், நெல்வாய், ஆத்துப்பாக்கம், தும்பாக்கம், வடமதுரை, எர்ணாங்குப்பம், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை(ஜன.20) மின் தடை.

News January 19, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றுயம் வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி(73). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், நேற்று(ஜன.18) தை அமாவசையை முன்னிட்டு தன் தந்தைக்கு திதி கொடுக்க சோளிங்கைல் உள்ள தக்கான் குளத்திற்குச் சென்றார். அப்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த கோழி ஏற்றி செல்லும் வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News January 18, 2026

திருவள்ளூர்: போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News January 18, 2026

திருவள்ளூர்: டிப்ளமோ, ITI போதும்.. மத்திய அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News January 18, 2026

திருவள்ளூர்: சொந்த தொழில் தொடங்க ஆசையா?

image

திருவள்ளூர் மக்களே, வேலை தேடும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் UYEGP திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் துவக்க ரூ.15 லட்சம் கடனும் 25% மானியமும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு உள் இருந்து 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.8 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர்.

News January 18, 2026

திருவள்ளூர்: வீட்டு வரி செலுத்த அலைய வேண்டாம்!

image

திருவள்ளூர் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம்<<>> மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News January 18, 2026

திருத்தணி முருகர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா!

image

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோயிலில் முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!