Thiruvallur

News May 21, 2024

திருவள்ளூர்: ரவுடியை வெட்டிய 3 வாலிபர்கள் கைது

image

திருவள்ளூர் அருகே வெங்கத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி தினேஷ் (27). கடந்த 18ஆம் தேதி இவர் மனைவியுடன் வெங்கத்தூர் அருகே வந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் முன் விரோதம் காரணமாக தினேஷை கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். புகாரின்பேரில் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜனார்த்தனம் (20), சாலமன் (27), ஜான் விக்டர் (27) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்

News May 21, 2024

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

image

மீஞ்சூர் அரியன் வாயல் அம்மா செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் வசந்த்-வள்ளி. இவர்களின் குழந்தை கீர்த்தனா (2) வீட்டின் அருகில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. மீஞ்சூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News May 21, 2024

திருவள்ளூர்: தந்தையை குத்திக் கொன்ற மகன்

image

பூந்தமல்லி அருகே திருமழிசையைச் சேர்ந்தவர் பாபு (49), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களது மகன் தமிழரசன் (24). நேற்றிரவு பாபு வேலை முடித்து குடிபோதையில் வீட்டுக்கு வந்ததை, மனைவி தேவி கண்டித்துள்ளார். அப்போது பாபு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால், கோபம் அடைந்த மகன் தமிழரசன் கத்தியால் பாபுவை குத்திக் கொலை செய்தார். வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிந்து தமிழரசனை இன்று காலை கைது செய்தனர்.

News May 21, 2024

திருவள்ளூர் மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

image

பூந்தமல்லி அருகே ராமாபுரம் பிரதான சாலையில் நடந்துசென்ற வாலிபரிடம் மர்ம நபர் கத்தியை காட்டி பணத்தை பறித்துச் சென்றார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ராமாபுரம், ஆண்டவன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (44) என்பவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

திருவள்ளூரில் உற்சவம்: குதிரை வாகனத்தில் புறப்பாடு

image

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் அகோபில மடம் வசந்த மண்டபத்தில் ஐந்தாம் நாளாக நேற்று எழுந்தருளினார். திருமஞ்சனத்தைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நுங்கு தோரணங்கள் வாயிலில் தொங்கவிடப்பட்டிருந்தது கோடை வசந்த விழாவின் சிறப்பு அம்சம் ஆகும். குதிரை வாகனத்தில் உற்சவர் பெருமான் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

News May 20, 2024

இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.20) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News May 20, 2024

சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

image

ஆவடி அருகே காட்டூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் சுரேஷ் (50), முரளி கிருஷ்ணன் (43) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று நிறுவனத்தில் உள்ள கிரேன்களை பழுது பார்க்கும் போது ஏர் சிலிண்டர் வெடித்து சிதறியதில் சுரேஷ், முரளி கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் ஆவடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 20, 2024

திருவள்ளூர்: கணவன்-மனைவி பரிதாப பலி!

image

ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் மெய்யழகன் (55). இவர், திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு நேற்று வந்தார். திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடன் வந்த அவரது மனைவி லட்சுமி, அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 20, 2024

திருவள்ளூர்: மின்வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

image

திருவள்ளூர் மாவட்டம்,
பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின்சார வேலி அமைத்துள்ளார். அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சாய்குமார் (27), பார்த்தசாரதி (20) ஆகியோர் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிப்பட்டு போலீசார் இருவரது உடல்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இன்று விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!