India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶இந்த லிங்கில் திருவள்ளூரில் உள்ள <
நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எலக்ட்ரிக்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, ஆவடி வெள்ளானூர் தனியார் கல்லூரி அருகே திடீரென புகைவிட்டு தீப்பிடித்தது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் தற்காலிகமாக ஜூலை 15 முதல் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் அறிக்கையின் மூலமாக தெரிவித்தார்.
புழல் பிரிட்டானியா நகர் திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி (37) மூன்று வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார் அவர் 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்து விட்டதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக நிறுவன சட்ட ஆலோசகர்கள் கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நவீன் நேற்று தூக்கிட்டு உயிரிழந்ததால் புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தேர்வு-தொகுதி IV பதவிகளுக்கான தேர்வு 12.07.2025 முற்பகல் நடைபெறவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 99 தேர்வு மையங்களில் உள்ள 126 தேர்வு கூடங்களில் 38,117 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும் பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்றுநபர் தனி அறைகள் கொண்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்.
ஆவடி ரயில் நிலையம் மேம்பாலத்தில் நேற்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஐ.டி., ஊழியரான தீனதயாளன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததால் தன் தாயிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெருசோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021208). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*
மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (044-27661600) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17016129>>தொடர்ச்சி<<>>
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*
வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துார், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு பகுதி, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளை காலை, 9: 00 மணி முதல் மாலை, 5: 00 மணி வரை மின்தடை செய்யப்படும்.
Sorry, no posts matched your criteria.