Thiruvallur

News October 12, 2025

திருவள்ளூரில் இன்றே கடைசி-APPLY NOW

image

திருவள்ளூர் மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்றே கடைசி. SHARE பண்ணுங்க மக்களே. ஒருவருக்காவது உதவும்!

News October 12, 2025

ஆவடி: தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு!

image

ஆவடி, பட்டாபிராமை சேர்ந்த சீனிவாசன் பிரெய்சி தம்பதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று (அக்.11) பிரெய்சி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது குழந்தை திடீரென பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. பெற்றோர் உடனே ஆவடி GHக்கு குழந்தையை அழைத்துச் சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பட்டாபிராம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 12, 2025

திருவள்ளூர்: தொடரும் கஞ்சா விற்பனை:இருவர் கைது

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஐனுல் ஹக், மொயினுல் அலி ஆகியோரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் அடைத்தனர்.

News October 12, 2025

ஆவடி: ரோந்து காவலர்களின் விவரங்கள்

image

ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் நடைபெற்ற இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் மண்டல வாரியாக இரவுப் பாதைகளில் கண்காணிப்பு மேற்கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பு, சாலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக கையாளப்பட்டு, அவசர தொடர்பு வசதிகளும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News October 11, 2025

திருவள்ளூர்: ரோந்து காவல் அதிகாரிகள் விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். மேலும், 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 11, 2025

திருவள்ளூர்: கனரா வங்கி வேலை!

image

கனரா வங்கியில் அப்ரண்டிஸ் பயிற்சி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மொத்த பணியிடங்கள்: 394 (தமிழ்நாடு), கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம்: ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: 12.10.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 11, 2025

திருவள்ளூர்: அரசு அலுவலகத்தில் அலைச்சல் இல்லை

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க!

News October 11, 2025

திருவள்ளூர் காவலர்களுக்கு அறிவுரை

image

திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (11.10.2025) நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, நேரில் பார்வையிட்டார். காவலர்கள் ஒழுக்கம், பொறுப்பு உணர்வு, மக்களுடன் நடந்து கொள்வது போன்ற பணிப்பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முக்கிய அறிவுரைகள் வழங்கினார்.

News October 11, 2025

திருவள்ளூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News October 11, 2025

திருவள்ளூர்: வடமாநில இளைஞர் கொலை வழக்கில் ட்விஸ்ட்!

image

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா போதையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சந்திரதாஸ், 30 அவரது அறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரது நண்பரான கார்த்திலால் ஹரிஜன், 30 என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கஞ்சா போதையில் நண்பனை அடித்து கொலை செய்த பகிர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும், கொலையாளியை போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!