India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.ஜே.புரம் பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் நேற்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளின் தேர்வு குறித்து பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பொன்னேரியில் 7 செ.மீட்டரும், புழல் ARG, R.K பேட்டை ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சிவப்பு மலை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் 2 செமீட்டரும், பள்ளிப்பட்டி, திருவளங்காடு ஆகிய பகுதிகளிலும் 1 செ.மீட்டரும் மழைப்பதிவானது.
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அமோக வெற்றி பெற்று எம்பி ஆனார். இதையடுத்து அவர் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் மற்றும் நிர்வாகிகளை ஆவடியில் சந்தித்து நன்றி தெரிவித்தார். நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, வட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், 2019இல் ராஜினாமா செய்துவிட்டு தமிழக காங்கிரஸில் இணைந்த அவர், தமிழக காங்கிரஸ் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் அதன்பிறகு காங்கிரஸின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவரானார். தற்போது திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.
கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், 2019இல் ராஜினாமா செய்துவிட்டு தமிழக காங்கிரஸில் இணைந்த அவர், தமிழக காங்கிரஸ் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் அதன்பிறகு காங்கிரஸின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவரானார். தற்போது திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் தமிழக அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர். மேலும் சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட 13 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று வைகாசி கிருத்திகை முருகனுக்கு விசேஷ தினம் என்பதால் வேண்டுதல் வைத்திருந்த பொதுமக்கள் முருகனுக்கு காவடிகள் எடுத்து மற்றும் அழகு குத்தி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். மூலவருக்கு கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
திருத்தணி அருகே சின்னம்மாபேட்டையில் உள்ள மாவு மில்லில் இருந்து சத்தம் அதிகமாக வருவதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் அவதிப்பட்டனர். இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்டோர் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் இன்று காலை ஏழுமலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் – 7,96,956 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி – 2,24,801 வாக்குகள்
*தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பி – 2,23,904 வாக்குகள்
*நாதக வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் – 1,20,838 வாக்குகள்
Sorry, no posts matched your criteria.