India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின்போது மழை பெய்து குளிர்வித்ததால், பக்தர்களிடம் பரவசத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
பூந்தமல்லி அருகே மதுரவாயல் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக நடந்த செல்லும் சிறுமிகளுக்கு பைக்கில் வரும் மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட போரூர் அருகே பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (22) என்பவரை நேற்று கைது செய்தனர்.
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பின் மாநிலத்தலைவராக இருந்தவர் ராஜாஜி (45). நேற்று மாலை இவர் பூந்தமல்லியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியைச் சார்ந்த காங்கிரஸ் பிரமுகர் கோபால் (61), கிருஷ்ணகுமார் (34), சம்பத்குமார் (45), லோகநாதன் (38), சந்தோஷ்குமார் (32), ராஜேஷ் (32) உள்பட 6 பேரை இன்று காலை கைது செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார். இவருடன் திமுக மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி உடன் வந்திருந்தார். அதனை தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காண்பதற்காக பக்தர்கள் கூட்டம் கூடியது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஐஸ்வர்யா பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு சென்றார்.
திருவள்ளூர் அஞ்சலக சப்டிவிஷனில் கடந்த நிதியாண்டில் 2023-24 நிதியாண்டில் சிறப்பாக பணி ஆற்றியவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். திருவள்ளூர் உட்கோட்ட கண்காணிப்பாளர் திருவள்ளூர் சப் டிவிஷனல் எஸ்.கௌஷிக் தலைமை தாங்கினார். மற்ற சப் டிவிஷனல் அதிகாரிகளும் பலர் உடன் இருந்தனர்.
ஆவடி அருகில் இந்து கல்லூரி- பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று இரவு 8 மணி அளவில் தண்டவாளத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை- அரக்கோணம் இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து 45 நிமிடங்கள் போராடி கோளாறை சரி செய்தனர். இதன் பிறகு இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை தொடங்கியது.
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கழகத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர் ராஜாஜி (45). இவர் பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது, பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் டீக்கடைக்குள் புகுந்து ராஜாஜியை சரமாரி வெட்டிக் கொலை செய்தனர். புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே ஆத்துப்பாக்கத்தில் மது சுந்தர நாயகி சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை பூட்டு உடைக்கப்பட்டது கண்டு கிராம மக்கள் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து ஆய்வு செய்ததில் அம்மன் கழுத்தில் இருந்த 1 சவரன் தாலி, கொலுசு, உண்டியல் பணம் ஆகிவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.22) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பூந்தமல்லி அருகே வானகரம் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது, அதிலிருந்து 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்திவந்த பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் பெங்களூருவிலிருந்து குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
Sorry, no posts matched your criteria.