India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் ஜாவித் அகமது திடீரென மரணம் அடைந்தார். இதன் காரணமாக இன்று அண்ணா 116வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயலில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறும். அதே நேரத்தில் 21 ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டங்கள் அனைத்தும் அதற்கு முன்பு, பின்பு நடத்த திருவள்ளூர் ஒருங்கிணைந்து மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்யுமாறு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேட்டுக்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக பொருளாளராக பணியாற்றி வந்தவர் ஜாவித் அகமது (60). அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய நோய் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக இன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் அதிமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றினார்.
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் வளர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மலையாளம் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஓணத்திருநாளில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இன்னல்களிலிருந்து கேரள மக்களுக்கு உள்ள போராட்ட குணத்துடன் மீண்டு உற்சாகமுடன் கொண்டாடிட இந்த ஓணத்திருநாள் அமையட்டும் என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அரசுமகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ) 30ஆம் தேதி வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டிட பட வரையாளர், தையல் தொழில்நுட்பம், ஸ்டெனோகிராபர் ஆகிய தொழில்நுட்ப தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் தேர்ச்சி பெறாதவர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சிய பிரபு ஷங்கர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான, எழுத்து தேர்வு 71 மையங்களில் 21,384 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இந்த தேர்வில், 15,129 பேர் தேர்வு எழுதினர். 6,255 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு நடைபெறுவதற்காக, தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிவறை, பேருந்து உள்ளிட்ட வசதி செய்யப்பட்டிருந்தது.
அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு ரவி இல்ல திருமண வரவேற்பு இன்று மாலை மணவாள நகரில் நடந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், கே. சி. வீரமணி, பி. வி.ரமணா, அதிமுக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ ஹரி உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்
மணவாள நகர் வெங்கத்தூர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கர்ணன் நேற்று ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட முயன்ற போது, வாகனத்தில் வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து லாவகமாக மடக்கி பிடித்ததில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அன்பரசன் என்கிற அன்புவை (28) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இன்று தனது அலுவலகத்தில் காலை 10:30 முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க இருக்கிறார். மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைந்த வளாகம் அலுவலகம் திருவள்ளூர் மாவட்டம் மக்கள் இன்றைய தினம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்
கனகம்மாசத்திரம் அடுத்த கூர்ம வில்லாபுரம் கிராமத்தின் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் ஒருவர் நைலான் கயிற்றில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். நேற்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். அதில் புஜ்ஜி ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணையன் என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அடித்துக் கொலையா என கனகம்மா சத்திரம் போலீசார் விசாரணை
Sorry, no posts matched your criteria.