Thiruvallur

News July 24, 2024

திருவள்ளூர் மக்களே திருப்பதி போறீங்களா?

image

அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன ரூ.300 டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். எனவே பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை <>https://ttdevasthanams.ap.gov.in/curtain<<>> என்ற இணையத்தில் செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க..

News July 24, 2024

விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர் தற்கொலை

image

ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் இன்று (ஜூலை 24) காளிதாஸ் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மயிலாடுதுறையைச் சேர்ந்த காளிதாஸ்(55) என்பவர் பயிற்சி மையத்தின் 8 ஆவது கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் 3 தோட்டக்கள் பாய்ந்து நிகழ்விடத்திலேயே காளிதாஸ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News July 24, 2024

திருத்தணி காவடி பக்தர்களுக்கு கட்டணம் ரத்து

image

திருத்தணி முருகன் கோவிலில் ஜூலை 27ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா மற்றும் 3 நாள் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று திருத்தணி முருகன் கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு, திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடிகள் எடுத்து வரும் பக்தர்களிடம் காவடி கட்டணம் ரத்து செய்யப்படும். ரூ.200 சிறப்பு தரிசன டிக்கெட், இந்தாண்டு ரூ.100 ஆக குறைக்கப்படும் என அறிவித்தார்.

News July 24, 2024

திருவள்ளூரில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,611 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 120 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,513 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 153 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 312 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 24) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 24, 2024

திருத்தணியில் உங்கள் ஊரில் ஒரு நாள் முகாம்

image

திருத்தணி வட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம், நகரம், திருவாலங்காடு ஒன்றியங்களில் உள்ள சில கிராமங்களில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஒரு நாள் முகாம் நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு சாலைப் பணி, பேருந்து நிலையம், குடிநீர் வினியோகம், காலை சிற்றுண்டி என பல்வேறு பணிகளை இன்று காலை 9 மணி முதல் நாளை மறுநாள் காலை 9 வரை இரவு தங்கி ஆய்வு நடத்துகிறார்.

News July 23, 2024

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.07.2024) மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கல்வி கடன் வழங்குவது தொடர்பாக வங்கியாளர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 23, 2024

திருத்தணி முருகன் கோயிலில் 1900 போலீசார் பாதுகாப்பு

image

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவிற்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள். எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1700 போலீஸ் மற்றும் 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

திருவள்ளூரில் 65 காலிப் பணியிடங்கள்

image

இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில், 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆவடி கோட்டத்தில் 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ஆம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்புமுள்ளவர்கள் ஆக.12ஆம் தேதிக்குள் rrccr.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

திருவள்ளூர் பாமக பிரமுகர் அதிரடி கைது

image

திருவள்ளூரில் பாமக செயற்குழு உறுப்பினர் குபேந்திரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று மணலி புதூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாரியில் வந்த குபேந்திரனுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த குபேந்திரன் போக்குவரத்து போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!