Thiruvallur

News September 21, 2024

எஸ்.எஸ்.பிரியாணி தயாரிப்பு கூடத்தில் ஆய்வு

image

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.எஸ்., பிரியாணி உணவகத்தில், 16ம் தேதி, பிரியாணி சாப்பிட்ட, 40 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதே நாளில் பொன்னேரியில் உள்ள அதன் கிளை உணவகத்திலும் பிரியாணி சாப்பிட்ட சிலரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.அலமாதியில் உள்ள சமையல் கூடத்தை, உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.

News September 21, 2024

திருவள்ளூரில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்

image

பள்ளிப்பட்டு அடுத்த கொளத்தூர், அத்திமாஞ்சேரி பேட்டை, பொதட்டூர் பேட்டை, மேலப்பூடி, பாலபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படும். காக்களூர் மின் நிலையம் மற்றும் கடம்பத்தூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படும்.

News September 20, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 20, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 20, 2024

திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

பிரபல பிரியாணி கடையில் சாப்பிட்டோருக்கு உடல்நல குறைவு

image

பொன்னேரியில் பிரபல தனியார் பிரியாணி கடையில் கடந்த 16ம் தேதி பிரியாணி மற்றும் சிக்கன் லாலிபாப் வாங்கி சாப்பிட்ட சிலருக்கு, வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், நேற்று பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த பிரியாணி கடைக்கு 30க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கிறது.

News September 20, 2024

திருவள்ளூரில் பல்வேறு இடங்களில் நாளை மின் தடை

image

பள்ளிப்பட்டு அடுத்த கொளத்தூர், அத்திமாஞ்சேரி பேட்டை, மேலப்பூடி, விளக்கணாம் பூடிபுதூர், பாலபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையும் மின் வினியோகம் தடை செய்யப்படும். காக்களூர் மின் நிலையத்தில் மற்றும் கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

News September 19, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 19, 2024

ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

image

கும்மிடிப்பூண்டியில் இருந்து பள்ளிப்பட்டு அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கவரப்பேட்டையில் இருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி கொண்டுவரப்பட்டது. இந்த லாரியை ஓட்டுநர் ஜோசப் ராஜ் (43) ஓட்டி வந்தார். சோளிங்கர் ரோடு செல்லாத்தூர் அருகே லாரி திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 19, 2024

தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

ஆவடி வட்டம், தண்டுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர். த. பிரபுசங்கர், இ.ஆ.ப. அவர்கள் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் காலை உணவு திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!