Thiruvallur

News July 23, 2024

திருத்தணி முருகன் கோயிலில் 1900 போலீசார் பாதுகாப்பு

image

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவிற்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள். எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1700 போலீஸ் மற்றும் 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

திருவள்ளூரில் 65 காலிப் பணியிடங்கள்

image

இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில், 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆவடி கோட்டத்தில் 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ஆம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்புமுள்ளவர்கள் ஆக.12ஆம் தேதிக்குள் rrccr.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

திருவள்ளூர் பாமக பிரமுகர் அதிரடி கைது

image

திருவள்ளூரில் பாமக செயற்குழு உறுப்பினர் குபேந்திரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று மணலி புதூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாரியில் வந்த குபேந்திரனுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த குபேந்திரன் போக்குவரத்து போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News July 23, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் கதறல்

image

திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததுபோல், போலீசார் தங்களையும் என்கவுண்டர் செய்ய உள்ளதாக ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றாவளிகள் நீதிமன்றத்தில் கதறியுள்ளனர். கொலையாளிகள் என கைது செய்யப்பட்டுள்ள அருள், பொன்னை பாலு, ராமு ஆகியோர் நீதிபதி முன்பு கூறியுள்ளனர். இதையடுத்து, குற்றவாளிகளை துன்புறுத்தக்கூடாது என்றும், எப்படி அழைத்து வந்தீர்களோ, அதேபோல் பத்திரமாக அழைத்து செல்ல வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

News July 23, 2024

மின்ட் ரமேஷிடம் தனிப்படை போலீசார் விசாரணை

image

ஆம்ஸ்ட்ராங்க படுகொலை குறித்து பிரபல ரவுடியான மின்ட் ரமேஷிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாஜக பிரமுகராக இருந்த அவருக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என அவரது வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் 3 வழக்கறிஞர்களிடம் விசாரித்து வரும் தனிப்படை போலீசார், சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் நெருங்கியதாகக் கூறப்படுகிறது.

News July 22, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்.

image

திருவள்ளூர் சரகத்தில் உதவி ஆய்வாளர் பரமசிவம், ஊத்துக்கோட்டை சரகத்தில் உதவி ஆய்வாளர் பூபாலன், திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் சுரேஷ், கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் பாலு ஆகியோர் இன்று (ஜூலை-22) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 22, 2024

ஆவடி மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்

image

ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையராக கந்தசாமி ஐஏஎஸ் அவர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, ஆவடி மாநகராட்சின் புதிய ஆணையர் கந்தசாமி விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இதேபோல் தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 22, 2024

பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் 28 நபர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (CCSE-II (Group IIA SERVICES) மூலம் நேரடியாக நியமன உதவியாளராக, மாவட்ட வருவாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வான 28 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கி அறிவுரை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் .

News July 22, 2024

திருவள்ளூரில் 417 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை.22) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்ப்பு முகாமில் ஆட்சியர் த.பிரபுசங்கர், பொதுமக்களிடம் இருந்து 417 கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை ரீதியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!