Thiruvallur

News October 1, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 1, 2024

திருவள்ளூர் அருகே இளைஞர் மீது பாய்ந்த போக்ஸோ

image

திருத்தணி பட்டாபிராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய பெருமாள் என்பவரின் மகன் சரவெடி சரத் என்கிற சரத்குமார் (28). திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் ஆறாம் வகுப்பு படித்தவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அவரது தந்தையிடம் கூறினார். தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்

News October 1, 2024

திருவள்ளூர்:நாளை அனைத்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும்

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்
நாளை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை டாஸ்மாக் விற்பனை கடைகள் மற்றும் இதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், ஹோட்டல்கள் போன்றவற்றை கண்டிப்பாக மூட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

News September 30, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 30, 2024

திருவள்ளூர் காவல்துறை அறிவுறுத்தல்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை திருவள்ளூர் சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் இன்ஸ்டாகிராம், டெலெக்ராம், போன்ற சமூக வலைதளங்களில் Privacy Setting யை. பயன்படுத்துங்கள் எனவும், இதன் மூலம் தங்களது விவரங்கள் பாதுகாக்கப்படும். மற்றவர்கள் தங்களின் விவரங்களை பார்ப்பது தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

News September 30, 2024

திருவள்ளூர் அருகே 3 பேருக்கு சரமாரி வெட்டு

image

மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு, பெருமாள் கோயிலை சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி ஜெயபாரதி, மருமகள் அர்ச்சனா. இன்று அதிகாலை 1மணியளவில் 5 பேர் கும்பல் வீட்டின் கதவை தட்டி உள்ளே புகுந்து அரிவாளால் ரகு, அவரது மனைவி ஜெயபாரதி, மருமகள் அர்ச்சனா ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேர் ஸ்டான்லி அனுமதிக்கப்பட்டு மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 30, 2024

திருவள்ளூர் அருகே கட்சி தலைவரின் கணவர் மீது தாக்குதல்

image

தமிழர் விடுதலைப் படை தலைவர் வீரலட்சுமி இவரது கணவர் கணேசன். இவர்கள் வேப்பம்பட்டு பெரியார் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு பக்கத்தில் வசிப்பவர் சாப்பிட்ட இலைகளை இவர்களது வீடருகே கொட்டியுள்ளனர்.இதனை வீரலட்சுமி கணவர் கணேசன் தட்டிக் கேட்டுள்ளார்.இதனால் வாய் தகராறு ஏற்பட்டு கணேசனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர்.அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

News September 30, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய ஊராட்சிகள் இணைப்பு

image

தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சிகளின் பதவி காலம் முடிந்தவுடன் நகர்புற உள்ளாட்சிகளுக்கு அருகில் உள்ள கிராம உள்ளாட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புடன் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகள் இணைய உள்ளது. சேலை,காக்களூர்,ஈக்காடு,தலக்கஞ்சேரி,புட்லூர்,திருப்பாச்சூர் பகுதி,வெங்கத்தூர்,மேல் நல்லாத்தூர்,தண்ணீர் குளம், சிறுவானூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

News September 29, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 29, 2024

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

image

திருவள்ளூர் பெரிய குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராக்கி என்கிற குமரன் (20). இவருக்கும் ஈக்காடு பகுதியை சேர்ந்த வெற்றிவேல், தரணி, எபி, அகஸ்டின் ஆகிய 4 பேருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று ராக்கி வீட்டுக்கு சென்ற 4 பேரும் அரிவாளால் ராக்கியை வெட்டி உள்ளனர். இதை தடுக்க முயன்ற அவருடைய தந்தையையும் வெட்டி விட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து 4 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!