India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(ஜூலை24) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள தணிகை இல்லம் தங்கி சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் ரூ.34 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக தங்கும் விடுதி கட்டப்பட்டது. இதனை அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ரவுடி வைரமணி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு தனது சொந்த ஊரான வீரநல்லூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நெல்லையில் அவரை கைது செய்தனர். அவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரனை, போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொண்ணை பாலு, அருள், ராமுக்கு 3 நாள் போலீஸ் விசாரணைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சம்போ செந்தில் எவ்வாறு ஹரிஹரனை தொடர்பு கொண்டார் என்ற கோணத்திலும், அவர் செல்போன் சிக்னல் வைத்தும் சம்போ செந்தில் எந்த நாட்டில் இருந்து உள்ளார் என்பதற்கான லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர்.
அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன ரூ.300 டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். எனவே பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை <
ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் இன்று (ஜூலை 24) காளிதாஸ் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மயிலாடுதுறையைச் சேர்ந்த காளிதாஸ்(55) என்பவர் பயிற்சி மையத்தின் 8 ஆவது கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் 3 தோட்டக்கள் பாய்ந்து நிகழ்விடத்திலேயே காளிதாஸ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில் ஜூலை 27ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா மற்றும் 3 நாள் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று திருத்தணி முருகன் கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு, திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடிகள் எடுத்து வரும் பக்தர்களிடம் காவடி கட்டணம் ரத்து செய்யப்படும். ரூ.200 சிறப்பு தரிசன டிக்கெட், இந்தாண்டு ரூ.100 ஆக குறைக்கப்படும் என அறிவித்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,611 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 120 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,513 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 153 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 312 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 24) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருத்தணி வட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம், நகரம், திருவாலங்காடு ஒன்றியங்களில் உள்ள சில கிராமங்களில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஒரு நாள் முகாம் நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு சாலைப் பணி, பேருந்து நிலையம், குடிநீர் வினியோகம், காலை சிற்றுண்டி என பல்வேறு பணிகளை இன்று காலை 9 மணி முதல் நாளை மறுநாள் காலை 9 வரை இரவு தங்கி ஆய்வு நடத்துகிறார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.07.2024) மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கல்வி கடன் வழங்குவது தொடர்பாக வங்கியாளர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.