India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரக்கோணம் அருகே உள்ள வின்டர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(30). இவர், இன்று(பிப்.16) காலை தன்னுடைய பைக்கில் திருவள்ளூருக்கு செல்வதற்காக பவுண்டரிகபுரம் அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மோதியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நசரேத்பேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம், முகப்பேர் ஆகிய பகுதிகளில் 10 டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக கேட்டு விற்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

திருவள்ளூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உத்தேச ஒதுக்கீட்டு மற்றும் திட்ட செயலாக்கத்தின் படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து பயனாளிகள் பெயர் பட்டியலை ஒப்புதல் பெறும் பொருட்டு அனைத்து கிராம ஊராட்சிகளில் நாளை(பிப்.17) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுமென மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அறிவித்துள்ளார்.

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே ஆங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(37). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நெற்று(பிப்.15) தனது பைக்கில் இறைச்சி வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில், பஸ் சக்கரத்தில் சிக்கிய பாலாஜி, ரத்தவெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருத்தணி நகராட்சி பாப்பிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் பாபு(40). இவருக்கு சத்யா(35) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று(பிப்.15) சிவராத்திரியை முன்னிட்டு திருத்தணி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். மேல் திருத்தணி பகுதியில் சென்ற போது பின்னால் வந்த லாரி இவரது பைக் மீது மோதியதில், படுகாயமடைந்த சத்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

திருவள்ளூர் மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதி ஏலாவூர் சோதனைச் சாவடியில் 30க்கும் மேற்பட்ட ஆட்கள் வாகனங்களை நிறுத்தி வாகனங்களை பரிசோதிக்கும் வேலையில் சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில், வேலையாட்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் வேலையாட்கள் மீது ஆரம்பாக்கம் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.