Thiruvallur

News October 13, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 13, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.

News October 13, 2024

திருவள்ளூரில் மாலை 4:00 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாலை 4:00. மணி. வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க.

News October 13, 2024

சுகாதார நிலைய கண்காணிப்பாளர் மயங்கி விழுந்து பலி

image

கடம்பத்தூர் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் இவர் வேப்பம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த 9-ந் தேதியன்று மயங்கி கீழே விழுந்து உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில் இரத்த அழுத்ததாள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

News October 12, 2024

ரயில் விபத்து: நிதி உதவி அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நேற்று சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்தோருக்கு 2.5 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 25 ஆயிரமும் ரூபாயும் வழங்கப்படும் என தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர். என். சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News October 12, 2024

மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே

image

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 10 மணிக்கு புறப்பட இருந்த சென்னை – விசாகப்பட்டினம் விரைவு ரயில், மதியம் 2.40க்கு புறப்படும். காலை 10.10க்கு புறப்பட இருந்த சென்னை – அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், மாலை 4.30க்கு புறப்படும். இரு ரயில்களும் அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

News October 12, 2024

பூந்தமல்லி அருகே சிலிண்டர் வெடித்து விபத்து

image

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சக்தி நகரில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லியில் குமார் என்பவர் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 12, 2024

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

image

வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டும் இல்லாமல் அக்.14, 15 ஆகிய நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

News October 12, 2024

ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

image

கவரைப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருப்பதி-புதுவை, சென்னை-திருப்பதி 2 மார்க்கத்திலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடப்பா-அரக்கோணம், அரக்கோணம்-புதுவை, அரக்கோணம்-திருப்பதி, விஜயவாடா-சென்னை, சூலூர்பேட்டை-நெல்லூர் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News October 12, 2024

ரயில் விபத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிப்பு?

image

கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரியை அடுத்து கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று இரவு இந்த விபத்து நேரிட்டது. சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் பல பெட்டிகள் தடம்புரண்டதாக ரயில்வே கூறியுள்ளது. இந்த ரயில் விபத்து நாசவேலை காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!