India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமான மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. எனவே பொதுமக்கள் நீர்நிலை பகுதிகளில் செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது என திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் சென்னை தேசிய நெடுஞ்சாலை 716 சாலை பணிக்காக விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கான இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து இன்று மருத்துவக் கல்லூரி முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இழப்பீடு தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். நேற்று பகல் நேரங்களில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு முதல் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. அம்பத்தூர் ஆவடி , மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை மற்றும் ரெயின் கோர்ட் கொண்டு செல்ல்லுங்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் வீதம் கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டு கோழி குஞ்சுகள் ஒருவருக்கு 40 கோழிக்குஞ்சுகள் 50 % மானியத்தில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அணுகி கேட்டுக் கொள்ள வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தின் ஏரிகளின் இன்று காலை 6 மணி வரை நிலவரத்தை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று மழை குறைந்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக குறைந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண முகாம் நடைபெற்று வரும் 38 பள்ளிகளை தவிர்த்து மற்ற அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் ஆணையின்படி நிவாரண முகாம் நடைபெறும் பள்ளிகள் மட்டும் இன்று செயல்படாது மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முழுவேலை நாள் என தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 221 கர்ப்பிணி தாய்மார்களை அடுத்த 3 வாரங்களில் பிரசவம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படும்கண்டறிந்து அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தங்க வைத்து தொடர் கண்காணிக்க பட்டுவந்தனர் இவற்றில்
இதுவரையிலும் 62 தாய்மார்கள் பிரசிவித்துள்ளார்கள் என ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நேற்று மழை பெய்யாததால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.