India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்துக் கொள்ளவும், புதுப்பித்தல் தவறிய உறுப்பினர்கள் மீள வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துக் கொள்ளவும், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக அக்.24 11 மணி முதல் 5 மணி வரை உறுப்பினர்களை சேர்க்கை முகாம் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக் கூறி வரும் போலி விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருங்கள்.
திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் நவம்பர் 7-ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் பயிற்சி பெற 8,10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.05.2024 முதல் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 30.09.2024 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 30.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே பழமையான கோவிலில் விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டு பிரிவினர், மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.கடம்பத்தூர் அடுத்த மப்பேட்டில் பழமையான ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 % இளம்பெண்களுக்கு கடுமையான ரத்தசோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை ரத்தசோகை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ரத்தசோகை பாதிப்பை நீண்ட காலமாக கவனிக்காமல் இருக்கும்போது பல்வேறு விதமான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடமிருந்து 336 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 25.10.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகான இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.