Thiruvallur

News August 11, 2024

திருத்தணி முருகன் கோயிலில் நடிகை ரோஜா காவடி செலுத்தினார்

image

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் ,நடிகையுமான ரோஜா திருத்தணி முருகன் கோயிலுக்கு உறவினர்களுடன் காவடி எடுத்து வழிபாடு மேற்கொண்டார். சாமி தரிசனம் செய்து முருகனுக்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினார். தொடர்ந்து அர்ச்சனை செய்தும் வழிப்பட்டு சென்றார். கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

News August 11, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,493 மில்லியன் கன அடி நீரும், சோழவரம் ஏரியில் 96 மில்லியன் கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,462 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. மேலும், பூண்டி ஏரியில் 89 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 310 மில்லியன் கன அடி நீரும் இருப்பில் உள்ளதாக இன்று (ஆக.11) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 11, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.10) காலை முதல் இன்று (ஆக.11) காலை வரை பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூரில் 17மி.மீ, திருவாலங்காட்டில் 15மி.மீ, ஆர்.கே பேட்டையில் 14மி.மீ, தாமரைப்பாக்கத்தில் 13மி.மீ, பூண்டியில் 7 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக பெய்த மழை அளவு 66 மி.மீ ஆகும் என பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 11, 2024

திருவள்ளூரில் இரண்டு நாட்களுக்கு ரயில்கள் பகுதி நேர ரத்து

image

அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 12, 14- ஆம் தேதிகளில் 9 மணி முதல் 1.10 மணி வரை பகுதி நேரமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளது. அதன்படி, சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் திருவள்ளூர் -அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் சென்ட்ரல்- திருத்தணி ரயில் திருவள்ளூர்- திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

News August 10, 2024

திருவள்ளூரில் இடியுடன் மழை

image

திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஈக்காடு, காக்களூர், மணவாளநகர், திருப்பாச்சூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் திருத்தணி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்திலும் மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது.

News August 10, 2024

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் ரயில்கள் ரத்து

image

சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே ஆக.12,14 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 11.10 முதல் 1.10 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வரை காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு – கணவர் விடுவிப்பு

image

சின்னத்திரை நடிகை சித்ரா 2020ஆம ஆண்டு டிசம்பர் மாதம் பூவிருந்தவல்லி அருகே ஒரு நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி நீதிபதி அவரை விடுவித்தார்.

News August 10, 2024

திருவள்ளுர் மழை அளவு விபரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.9) காலை முதல் இன்று (ஆக.10) காலை வரை பெய்த மழை அளவு விவரம் வெளியாகியுள்ளது. ஆவடியில் 51 மி.மீ, செங்குன்றத்தில் 32 மி.மீ, ஊத்துக்கோட்டையில் 23 மி.மீ, திருவள்ளூரில் 9 மி.மீ, தாமரைப்பாக்கத்தில் 7 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 140 மி.மீ மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

News August 10, 2024

திருவள்ளூரில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த 8 பேர் கைது

image

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த தம்பதிகள் சுரேஷ் -பார்வதி. திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் சுரேஷ் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவருடன் சுரேஷ் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனால், கோபமடைந்த சுரேஷின் மனைவி பார்வதி கள்ளக்காதலியான ராஜேஸ்வரி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.இது தொடர்பாக 8 பேரை திருவள்ளூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.

News August 10, 2024

திருவள்ளூர் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேட்டை எட்டியம்மன் கோவிலில் உள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது பட்டியலின மக்கள் கோவிலுக்கு செல்லும் வழி தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு அப்போதே கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், 22 ஆண்டுக்கு பிறகு நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிலும் இதே பிரச்சனை தொடர்ந்தது. இதனால் கோவிலுக்கு செல்லமுடியாத ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!