India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், உயிர் நுண்ணுட்ட உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஏடிஎம் கார்டு, கூகுள்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் மூலம் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் அதற்கான பண மில்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் பிஓஎஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் -திருவள்ளூர்-ஆவடி இடையே செப்.9ஆம் தேதி முதல் 3 புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செப்.9ஆம் தேதி முதல் ஆவடியில் இருந்து காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கும், சென்ட்ரலில் இருந்து காலை 10.40 மணிக்கு திருவள்ளூருக்கும், மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு சென்ட்ரலுக்கும் என 3 புதிய மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் நிலவும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து வரும் 9ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூந்தமல்லி பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு நேற்று (செப்.6) தகவல் வந்தது. இதையடுத்து, அவர் உத்தரவின் பேரில் பூந்தமல்லி சரக மருந்துகள் ஆய்வாளர் ரூபினி தலைமையில் ஊழியர்கள் மருந்துக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மருத்துவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை செய்த 3 மருந்து கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவள்ளூர் சரகத்தில் ஆய்வாளர் லெட்சுமி, ஊத்துக்கோட்டை சரகத்தில் ஆய்வாளர் தமிழ்செல்வி திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் மலர், கும்மிடிப்பூண்டி சரகத்தில் ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோர் இன்று (செப்.06) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் உட்பட்ட வெள்ளி வாயில் சாவடி கிராமத்தில் டோரண்ட் கேஸ் எரிவாயு கசைவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் அருகே உள்ள பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு விரைந்த மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு அப்பகுதி மக்களை அச்சப்பட வேண்டாம் என்றும் உடனடியாக சீரமைக்கடும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
திருத்தணி தீ விபத்தில் மேலும் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது. திருத்தணி முருகப்பா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், இன்று காலை 2 வயது ஆண் குழந்தை பலியான நிலையில் மேலும், ஒரு குழந்தை பலியானது. மேலும், குழந்தைகளின் தாய், தந்தையான பிரேம்குமார் (32), மஞ்சுளா (31) கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பு ஆண்டிற்கான அனைத்து தொழிற்பிரிவுகளிலும், காலியாக உள்ள இருக்கைகளை நிரப்புவதற்கான நேரடிச் சேர்க்கை செப்.30 ஆம் வரை நடக்கிறது. பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தங்கள் சேர்க்கை விண்ணப்பத்தை அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சமர்ப்பித்து, பயிற்சியில் சேரலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (செப்.5) காலை முதல் இன்று (செப்.6) காலை வரை பெய்த மழை அளவு: கும்மிடிப்பூண்டியில் 55 மி.மீ, ஊத்துக்கோட்டையில் 15 மி.மீ, தாமரைப்பாக்கத்தில் 8 மி.மீ, பொன்னேரியில் 6 மி.மீ, சோழவரம், செங்குன்றத்தில் 3 மி.மீ, ஜமீன் கொரட்டூரில் 2 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 98 மி.மீ ஆகும். கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்கிறது.
Sorry, no posts matched your criteria.