Thiruvallur

News December 11, 2024

2,79,200 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு

image

திருவள்ளுர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் டிச.16-ம் தேதி தொடங்கப்பட்டு ஜன.5-ம் தேதி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது. உரிமையாளர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 11, 2024

இராணுவ முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.13-ம் காலை 8 மணி முதல் மாலை 5 வரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராணுவ ஓய்வூதியம் குறைதீர் தீர்ப்பாயத்தினர் குழுவானது முகாமிட்டு பணி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் விரைவில் அனுமதிக்கவும் உயிர் சான்று சமர்பிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இராணுவ ஓய்வூதியம் பெறுவோர் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 11, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.

News December 11, 2024

திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 10, 2024

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் டிச.13ஆம் தேதி காலை 10மணிக்கு திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து விவசாயப் பெருமக்களும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகான கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி 

image

பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பஜாரில் இட்லி, தோசை மாவு அரைக்கும் கடை நடத்தி வருபவர் வெண்ணிலா (46). நேற்று இரவு வாடிக்கையாளர்களுக்கு மாவு அரைத்து கொடுத்துவிட்டு கிரைண்டரில் தண்ணீர் ஊற்றி கழுவிய போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுபரிசோதித்ததில் மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 10, 2024

திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 9, 2024

திருவள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது

image

சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும், சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பரும் கைதாகினர். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 8, 2024

திருவள்ளூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த  200 பேர் விலகல் 

image

திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியை சார்ந்த மாவட்டத் தலைவர் சபரீஷ் தலைமையில் 200 பேர் அக்கட்சியில் இருந்து விலகி இன்று காலையில் திமுக ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.  அனைவருக்கும் அமைச்சர் நாசர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

error: Content is protected !!