Thiruvallur

News September 12, 2024

சீதாராம் யெச்சூரி மறைவிற்கு எம்பி இரங்கல்

image

சீதாராம் யெச்சூரி மறைவிற்கு திருவள்ளூர் எம்பி தனது சமூக வலைதள பக்கத்தில் மாணவர் சங்கம் மூலம், இடதுசாரி தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு இந்தத் துயரமான சூழலில் இடதுசாரி தோழர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவு தெரிவித்து உள்ளார்.

News September 12, 2024

உத்தரவு பிறப்பித்த திருவள்ளூர் ஆட்சியர்

image

திருவள்ளூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரவீன் (25). திருத்தணி ஜோதி நகரை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (24). இவரக்ள் இருவரும் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டிருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி சீனிவாச பெருமாள் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் பிரபு சங்கர் நேற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். புழல் சிறைக்கு உத்தரவு நகலை வழங்கினார்.

News September 12, 2024

திருவள்ளூர்: இளைஞர்களிடம் அமலாக்கத்துறை சோதனை

image

பள்ளிப்பட்டு அருகே உள்ளது குமாரராஜா பேட்டை. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தமிழரசு மகன் குப்பன், ரத்தின மகன் பிரகாஷ், ஐயப்பன் மகன் அரவிந்தன் இந்த மூவர் வீட்டிலும் இன்று சென்னையிலிருந்து வந்த அமலாக்கத்துறையினர் காலை முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளிப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எது சம்பந்தமான விசாரணை என்பது இதுவரை வெளியாகவில்லை.

News September 12, 2024

திருவள்ளூரில் அரசு விரைவு பேருந்து ஜப்தி

image

நசரத்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவர் கடந்த 2002 ஆண்டு சுற்றுலா சென்றபோது சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது மனைவி,2003ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.2005யில் அரசு விரைவு பேருந்து நிர்வாகம் சார்பில்,3.90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க என நீதிமன்றம் உத்தரவிட்டது.இழப்பீட்டு தொகையை நேற்று முன்தினம் வரைவழங்காததால் அரசு விரைவு பேருந்து நேற்று ஜப்தி செய்யப்பட்டது.

News September 12, 2024

திருவள்ளூரில் திரைப்பட நகரம்; அமைச்சர் தகவல்

image

சென்னை தரமணியில் உள்ள அரசு எம்ஜிஆர் திரைப்பப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார், பின்னர் பத்திரிக்கையாளர்களிடம், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கரில் திரைப்பட நகரம் உருவாக்கப்பட உளள்து. அமைசர் உதயநிதியும் அதற்கான இடத்தை பார்வையிட்டுள்ளார். விரைவில் பணி தொடங்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

News September 12, 2024

சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

image

ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று நண்பர்கள் வீடுகளில் கொடுப்பதற்காக பலகாரங்களை எடுத்துக்கொண்டு சிறுமி வந்துள்ளார். அருகில் உள்ள வீட்டில் வளர்த்து வரும் நாய் திடீரென சிறுமி மீது பாய்ந்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நாயிடமிருந்து சிறுமியை மீட்டனர்.

News September 12, 2024

3 கோடி ரூபாய் மீட்டு தர 50-க்கும் மேற்பட்டோர் மனு

image

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெய்வேலி கிராமத்தை சார்ந்தவர் ரமேஷ். இவர் ஏல சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி ஊரை விட்டு தப்பி சென்றதால் பாதிக்கப்பட்டவர்கள் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

News September 11, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

திருவலாங்காடு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

image

திருவாலங்காடு மணவூர் அரசு உயர்நிலை பள்ளி திருவள்ளூர் சேர்ந்த பாஸ்கர்(52) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 3 மாணவிகளிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் புகார் செய்தனர் விசாரணைக்கு பின் ஆசிரியர் பாஸ்கர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News September 11, 2024

மீஞ்சூரில் இரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எம்பிக்கு கோரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் -காட்டூர் நெடுஞ்சாலையில் உள்ள இரயில்வே கடவு பாதையில் நாளொன்றுக்கு 10,000 மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கடந்து செல்கின்றன.இங்கு கேட் முடப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.இந்நிலையில் இங்கு சுரங்கப்பாதை அமைக்க திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

error: Content is protected !!