India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் வளர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மலையாளம் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஓணத்திருநாளில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இன்னல்களிலிருந்து கேரள மக்களுக்கு உள்ள போராட்ட குணத்துடன் மீண்டு உற்சாகமுடன் கொண்டாடிட இந்த ஓணத்திருநாள் அமையட்டும் என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அரசுமகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ) 30ஆம் தேதி வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டிட பட வரையாளர், தையல் தொழில்நுட்பம், ஸ்டெனோகிராபர் ஆகிய தொழில்நுட்ப தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் தேர்ச்சி பெறாதவர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சிய பிரபு ஷங்கர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான, எழுத்து தேர்வு 71 மையங்களில் 21,384 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இந்த தேர்வில், 15,129 பேர் தேர்வு எழுதினர். 6,255 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு நடைபெறுவதற்காக, தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிவறை, பேருந்து உள்ளிட்ட வசதி செய்யப்பட்டிருந்தது.
அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு ரவி இல்ல திருமண வரவேற்பு இன்று மாலை மணவாள நகரில் நடந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், கே. சி. வீரமணி, பி. வி.ரமணா, அதிமுக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ ஹரி உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்
மணவாள நகர் வெங்கத்தூர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கர்ணன் நேற்று ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட முயன்ற போது, வாகனத்தில் வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து லாவகமாக மடக்கி பிடித்ததில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அன்பரசன் என்கிற அன்புவை (28) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இன்று தனது அலுவலகத்தில் காலை 10:30 முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க இருக்கிறார். மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைந்த வளாகம் அலுவலகம் திருவள்ளூர் மாவட்டம் மக்கள் இன்றைய தினம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்
கனகம்மாசத்திரம் அடுத்த கூர்ம வில்லாபுரம் கிராமத்தின் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் ஒருவர் நைலான் கயிற்றில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். நேற்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். அதில் புஜ்ஜி ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணையன் என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அடித்துக் கொலையா என கனகம்மா சத்திரம் போலீசார் விசாரணை
திருத்தணியில் கடந்த வெள்ளியன்று நடந்த தீ விபத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் குழந்தைகளின் தாயார் இறந்தனர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப தலைவர் பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீ விபத்தில் பலியானது. அப்பகுதி மக்கள் இடையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் மகளிர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்த மருத்துவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட அளவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருவாலங்காடு, பெரியக்களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாசாமி மகன் சாந்தகுமார்(17). இவர் அரக்கோணம் அடுத்த புளியமங்களத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் முதலாமாண்டு பயின்று வந்தார். நேற்று ஐ.டி.ஐ.,க்கு சென்று விட்டு மாலை அரக்கோணத்தில் இருந்து புறநகர் ரயில் வாயிலாக வீடு திரும்பும் போது எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.