India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி முருகர் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பனை செய்வதாக இந்து சமய அறநிலை துறை ஆணையர் அலுவலகத்திற்கு பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று திருத்தணி கோவிலில் இணை ஆணையர் ரமணி பஞ்சாமிர்தம் விற்கப்படும் கடைகளில் சோதனை நடத்தினார். அப்போது, பஞ்சாமிர்தம் கெட்டு போய் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மொத்தம், 50 கிலோ பஞ்சாமிர்தம் டப்பாக்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் இன்று வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. மேற்படி, இந்த குறைதீர் முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் நாளை வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. மேற்படி, இந்த குறைதீர் முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக ஆவடியில் 215மி.மீ. திருத்தணி 170மி.மீ. ஜாமின் கொரட்டூர் 143 மி.மீ. பூந்தமல்லி 142.5மி.மீ. திருவாலங்காடு 131 மி.மீ. திருவள்ளூர் 124.5 மி.மீ. பூண்டி94 மி.மீ. பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் இயங்கும் எனினும் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் சூழலுக்கு அற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் அறிவிப்பு.
பூந்தமல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, வட்டாட்சியர் அலுவலகத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் நிலை ஏற்பட்டது. இதேபோன்று, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மான் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
பூண்டி ஏரியில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலையாற்றின் கரையோரமாக இருக்கும் நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ராம்பாக்கம், ஒதப்பை, எறையூர், தாமரைப்பக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், சீமாவரம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், எண்ணூர், சடையன்குப்பம் ஆகிய பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகான கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, திருவள்ளூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். நேற்று பெய்த கனமழை மீண்டும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூரில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.