India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 2 டன் எடையுள்ள 17 செம்மரக்கடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது செம்மரக்கட்டைகள் சிக்கின. ஆந்திராவில் இருந்து சரக்கு ஆட்டோவில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை-திருவள்ளூர் மின்சார ரயில் பயணம் 10 நிமிடங்கள் அதிகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வே அறிவிப்பில், ஆவடி-அம்பத்தூர் இடையே மெட்ரோ குடிநீர் வாரியத்தின் குழாய் பொருத்தும் பணிகள் நடைபெறுவதால், ரயில்கள் 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது, ரயில்கள் 90 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இனி 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும்.
பராமரிப்பு காரணமாக சென்ட்ரல் – திருவள்ளூர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் – ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமிலிட்டரி சைடிங் – சென்ட்ரல் அதிகாலை 3:30 மணி ரயில் இன்று, 26, 27ஆம் தேதியில் ஆவடியில் இருந்து இயக்கப்படும். அதேபோல், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில் இன்றும், நாளையும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.
திருத்தணி அடுத்த திருவாலங்காடில் வடா ரன்னீஸ்வரர் சமேத வண்டார் குழலி அம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திரைப்பட நடிகர் யோகி பாபு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை திருவலங்காடு ஐடி விங் அமைப்பாளர் மருதவல்லிபுரம் வழக்கறிஞர் ராஜா வரவேற்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினார். அந்த மனுவில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்த 5 பேர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஆதாரத்துடன் தனித்தனியாக தொண்டர்களுடன் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயில் பகுதியில் தினா(16) என்ற சிறுவன் மேடையில் டிஜே செட் அமைத்த பின்னர் செல்போன் சார்ஜ் போட்டு உள்ளார். அப்போது மேடை மழையால் நினைந்ததில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது..
Sorry, no posts matched your criteria.