Thenilgiris

News November 5, 2024

கூடலூர்: நெல் கதிர் அறுவடை திருவிழா

image

கூடலூர் பகுதியில் நெல் அறுவடையின் போது, ‘அறுவடை திருவிழா’ நடைபெறுவது வழக்கம். அதன்படி, இங்கு உள்ள புளியம்பாறை பகவதி அம்மன் மற்றும் ஆயிரம் வில்லி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து பக்தர்களுடன் புளியம் வயல் பகுதிக்கு சென்றனர். அங்கு நெல் அறுவடை செய்து மீண்டும் கோயில் சென்று நெல் கதிருக்கு பூஜை செய்தனர்.

News November 5, 2024

நீலகிரி: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், குன்னூர் கோத்தகிரி பகுதியில் மட்டும் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா ரூ.8,000 வீதம் ரூ.2 லட்சமும், வெலிங்டன் பகுதியில் மரம் விழுந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். 

News November 5, 2024

நீலகிரியில் அவசர கால எண்கள் அறிவிப்பு 

image

நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்த தகவல் தெரிவிக்க, மாவட்ட நிர்வாகத்தால் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது:- கட்டணமில்லா தொலைபேசி எண் .1077 மற்றும் 0423 245 0034 & 245 0035 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், 99431 26000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்.

News November 5, 2024

குன்னூர் தேயிலை தூள் ஏல மையத்தில் ரூ.47.64 கோடி  வருமானம்

image

குனனுார் 43வது தேயிலை தூள் ஏலத்தில் 21.47 லட்சம் இலை ரகம் 5.82 லட்சம் டஸ்ட் ரகம் என, மொத்தம் 27.29 லட்சம் கிலோவில், 18.69 லட்சம் கிலோ தான் ஏலம் போனது. சராசரி விலை கிலோவிற்கு, 147.85 ரூபாய் என இருந்தது. இலை ரகத்தில் ஆர்த்தோடக்ஸ் ரூ.137.69 சி.டி.சி ரூ.149.66 டஸ்ட் ரகத்தில் ஆர்த்தோடக்ஸ் ரூ.132.73 சி.டி.சி ரூ143.40 எனவும் ஏலம் மூலம் விற்பனையாகி ரூ.27.64 கோடி மொத்த வருவாய் தேயிலை ஏலத்தில் கிடைத்தது.

News November 4, 2024

நீலகிரி இளைஞர்களே.. ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 7ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

கிண்ணக்கொரை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

image

குந்தா சுற்று வட்டார பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசுவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிண்ணக்கொரை மஞ்சூர் சாலைகளில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் சாலையோர பகுதிகளில் பல மரங்கள் விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு, சீர்செய்யும் பணிகள் போர்கால அடிப்படையில் முடக்கி விடப்பட்டுள்ளது.

News November 4, 2024

மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை துணை ஆட்சியர் ஆய்வு !

image

கோத்தகிரி,15-வது வார்டு குமரன் காலனி பகுதியில் கடந்த முன்தினம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் மண்சரிந்த திட்டுகளை துணை ஆட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் கோமதி, வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், ஆகியோர் வார்டு உறுப்பினர் மு.க கணபதியின் கோரிக்கையை ஏற்று வருகை தந்து பாதிக்கப்பட்ட பொது மக்களை வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

News November 4, 2024

நீலகிரியில் அவசரகால எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதனால் குன்னூர், உதகை, கோத்தகிரி போன்ற பகுதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து கடும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் அவசர கால உதவி எண்கள் அறிவித்துள்ளது. 0423-2450034, 0423-2450035 மற்றும் வாட்ஸ்அப்: +919943126000 எண்களில் தொடர்பு கொள்ளவும்.

News November 4, 2024

நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

image

உதகை , மேட்டுப்பாளையம் இடையே பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததை அடுத்து, தண்டவாளம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெறுகின்றன. மேலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையால் நீலகிரி மலை ரயில் சேவை நவம்பர் 5 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News November 4, 2024

குன்னூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

error: Content is protected !!