India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்கள் முதிர்ந்த நிலையில் குடும்ப தேவைக்காக விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வருவாய்க்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்படும் மரங்கள் விதிகளை மீறி வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோத்தகிரியில் ‘கழிவறை இல்லாத மாவட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதாரம் ஒரு அடிப்படை மனித உரிமை. எல்லா இடத்திலும் சுகாதாரத்தின் தேவை முக்கியம். திறந்தவெளியில் மலம் கழிப்பு, கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். நீலகிரி பொருத்தவரை கிராமப்புறங்களில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹெலிபேட் தளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகின்றன. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்யப்பட்டது. தற்போது ஹெலிபேட் தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெளி ஆட்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 15ம் தேதி நடக்க இருந்த விவசாயிகள் கூட்டம் நாளை (நவம்பர் 22) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை அளிக்கலாம் என ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
தேயிலை விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக, ரூ.8000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவக்கப்பட்டது. கடந்த, 2ம் தேதி விண்ணப்பிக்கும் தேதி நிறுத்தப்பட்டது. அறிவக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி மையம் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ளது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை உள்ள மாணவ மாணவியர் இதில் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கீர்த்தி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக வருகை தரும் இந்திய குடியரசுத் தலைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று உதகை தீட்டுக்கல்லில் ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தில் நீலகிரி மாவட்ட காவல் துறையின் வெடிகுண்டு நிபுணர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர். ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தின் கட்டுப்பாட்டை இன்று முதல் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் முழுமையாக எடுத்துக் கொண்டனர்.
கோத்தகிரி தாலுக்காவில் ‘உங்களைத் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோத்தகிரி கிளை வங்கிக்கு சென்றார். அங்கு வங்கி பணிகள் மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கிளை மேலாளர் வனஜா உடன் இருந்தார்.
➤நீலகிரியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் ➤சிறுவர்களை விரட்டிய ஒற்றை காட்டு யானை ➤சிரியூர் கோயிலுக்கு செல்ல வேண்டாம் ➤புவிசார் குறியீட்டுக்கு காத்திருக்கும் ஊட்டி சாக்லெட் ➤மருத்துவமனையில் நீலகிரி எஸ்.பி ஆய்வு ➤வீரதீர செயல்புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் ➤346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி ➤நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி ➤நீலகிரியில் பெண்கள் கும்மி ஆட்டம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நடத்தும் தனியார் நிறுவனங்கள், தங்கள் வேலைக்கு அமர்த்தியுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை, தொழிலாளர் நலத்துறை வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. பதிவேற்றம் செய்த விபரங்களை குன்னூர் தொழிலாளர் உதவியாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.