Thenilgiris

News November 23, 2024

நீலகிரி: ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

image

குன்னுார் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பாதுகாப்பு நடைமுறைகள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து விவாதங்கள் நடந்தன. ராணுவ கல்லூரியில் ராணுவ உயர் அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா, கூடுதல் கலெக்டர் சங்கீதா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

News November 22, 2024

நீலகிரியில் பாலியல் வன்கொடுமை: டிடிவி தினகரன் கண்டனம்

image

நீலகிரியில் மாணவி ஒருவரை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரக் கும்பல் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருட்களின் விற்பனையை அரசு நிறுத்த வேண்டும்” என்றார்.

News November 22, 2024

நீலகிரியில் போலீசார் தீவிர சோதனை

image

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி வருகை தரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோவையில் இருந்து  ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார். இந்நிலையில் அவரது பாதுகாப்பிற்காக  நீலகிரி மாவட்டம், கேரளா, கர்நாடகா எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் உட்பட, பர்லியார் மற்றும் கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

News November 22, 2024

ஜனாதிபதி வருகை: அவசர கதியில் சாலை சீரமைப்பு

image

நீலகிரி: குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிறார். 27ம் தேதி கோவையிலிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார். 28ம் தேதி சாலை மார்க்கமாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிலையில் ஜனாதிபதி செல்லும் தாவரவியல் பூங்கா சாலை உட்பட சில பகுதிகளில் நகராட்சி, மாநில, தேசிய நெடுஞ்சாலை துறையினர் ‘பேட்ச்’ பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

News November 22, 2024

நீலகிரியில் 23ந் தேதி கிராம சபை கூட்டம் !

image

நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும்23ஆம் காலை 11 மணியளவில் உள்ளாட்சிகள் தின கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News November 22, 2024

குன்னூர் -ஊட்டி சாலையில் லாரி விபத்து

image

குன்னூர், அருவங்காடு, கேத்தி எள்ளநல்லி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்த விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே அகற்றப்படாத மண் குவியல்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இந்த சமயத்தில் நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து கோழி உரம் ஏற்றி வந்த லாரி சேற்றில் சறுக்கி விபத்து ஏற்பட்டது. டிரைவர் கருப்புசாமி சிறு காயத்துடன் தப்பினார்.

News November 21, 2024

நீலகிரி இரவு ரோந்து அலுவலர்கள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில், நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம், மாவட்ட காவல் துறை அலுவலரால் (21.11.2024) இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 21, 2024

நீலகிரி: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ நீலகிரிக்கு குடியரசுத் தலைவர் வருகை ➤ தேயிலை வாரிய கல்வி உதவித்தொகை விண்ணப்பம் நிறுத்தம் ➤ ஊட்டி பூண்டு திடீர் விலை வீழ்ச்சி ➤ ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் வெளி ஆட்கள் நுழைய தடை ➤ விதிமீறி வெட்டப்படும் சில்வர் ஓக் மரங்கள் ➤ கூடலூரில் சாலையை சீரமைத்த ஓட்டுநர்கள் ➤ மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது ➤ தேவாலாவில் சுகாதார துறை கள ஆய்வு ➤ நெடுகுளா பகுதியில் பனி மூட்டம் அதிகரிப்பு

News November 21, 2024

தாங்கும் தன்மையை ஆய்வு செய்ய முடிவு 

image

மலைகளின் அரசி என்று போற்றப்படுகின்றன நீலகிரி மாவட்டத்திற்கு, வருடத்திற்கு சுமார் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்ற வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்து வர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மாவட்டத்தின் தாங்கும் தன்மையை ஆய்வு செய்ய பெங்களூருவை சேர்ந்த ஐ.எம.எம் நிறுவனம் மூலம் ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

News November 21, 2024

சிறந்த தனி பிரிவு காவலர்களுக்கு பாராட்டு

image

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பதவி ஏற்ற நாளில் இருந்து, காவலர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களது குறைகளைக் கேட்பது முதல், பணி ஊக்குவிப்பு வரை கவனித்து வருகிறார். இந்த நிலையில் தனிப்பிரிவு காவலர்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பாராட்டி சான்றிதழ்களை இன்று வழங்கினார்.

error: Content is protected !!