Thenilgiris

News December 2, 2024

நீலகிரியில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (1-12-2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் எந்த வித அவசர உதவிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.

News December 1, 2024

நீலகிரி: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ ஊட்டியில் வீடு பற்றி எரிந்து தீ விபத்து ➤ நீலகிரியில் முருங்கைக்காய் விலை உயர்வு ➤ கட்டபெட்டு பகுதியில் நாளை மின் நிறுத்தம் ➤ கூடலூர்: கடும் பனிப்பொழிவு, வாகன ஓட்டிகள் அவதி ➤ உதகை கர்நாடக பூங்காவில் இம்மாத இறுதியில் மலர் கண்காட்சி ➤ குந்தா – குன்னூர் சாலையில் கடும் பனிமூட்டம் ➤ கோத்தகிரி பகுதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ➤ கூடலூர் வியாபாரிகள் போராட்ட எச்சரிக்கை

News December 1, 2024

கர்நாடக மாநில பூங்காவில் முதல் முறையாக மலர் கண்காட்சி

image

ஊட்டியில் உள்ள கர்நாடகா பூங்காவில் முதல் முறையாக இம்மாதம் இறுதியில் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 20ஆம் தேதிக்கு மேல் 10 நாட்கள் நடத்த பூங்கா நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

News December 1, 2024

ஊட்டி மலை ரயில் புத்தாண்டு பயணம்

image

குன்னூர், கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2 வரை ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணி, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் 11.25 மணி என 2 முறை இயக்கப்படுகிறது.

News December 1, 2024

நீலகிரி கனமழை பெய்யலாம் 

image

1977-க்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் புயல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா சென்று அரபிக்கடல் செல்லும் எனவும், ஊட்டியில் கனமழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் நீலகிரியில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

நீலகிரி: இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தேவர் சோலையில் கடையில் தீ விபத்து ➤ கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு ➤ ஒட்டுப்பட்டரையில் சுற்றி திரியும் ஓற்றை காடொருமை ➤ கூடலூர் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவு துவங்க நடவடிக்கை ➤ கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி ➤ கமர்சியல் சாலை பகுதியில் வீட்டில் தீ விபத்து ➤ கோத்தகிரி வந்த எம்.பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு

News November 30, 2024

ஜனாதிபதியுடன் பழங்குடியினர் குழு புகைப்படம் 

image

உதகை ராஜ்பவனில் நேற்று ( 29 தேதி ) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், பழங்குடியினர் பங்கேற்ற கலாச்சார நடனங்கள் நடைபெற்றது. அப்போது குடியரசு தலைவருக்கு பழங்குடி கைவினைஞர் செதுக்கிய அவரது உருவ படத்தை, நீலகிரி ஆதிவாசி நல சங்க செயலாளர் எம் ஆல்வாஸ் வழங்கினார். மேலும், குடியரசு தலைவர், பழங்குடியினருக்கு நினைவு பரிசுகளை வழங்கினார் . அதை தொடர்ந்து குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.

News November 30, 2024

உதகை உருளைக்கிழங்கு ஏல மைய நேரம் மாற்றம் 

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மேட்டுப்பாளையம் கிளை ஆரிகவுடர் ஏல மையத்தில், நாள்தோறும் காலை 11 மணியளவில் உதகை உருளைக்கிழங்கு ஏலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏல நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் காலை 9:30 மணிக்கு உதகை உருளைக்கிழங்கு ஏலம் நடைபெறும். ஏலத்திற்கு உதகை உருளைக்கிழங்கை கொண்டு வரும் விவசாயிகள் நேர மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

News November 30, 2024

நவம்பர் மாத பசுந்தேயிலை விலை நிர்ணயம்

image

குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் மூலமாக, நீலகிரி விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு மாதாந்திர கொள்முதல் விலை, தேயிலை தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூலம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடிய குழுவானது, நவம்பர் மாதத்திற்கான ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.20.80 என விவசாயிகளுக்கு வழங்க, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News November 30, 2024

உதகையில் இருந்து புறப்பட்டார் ஜனாதிபதி

image

நீலகிரி மாவட்டத்திற்கு 4 நாள் அரசு முறை பயணமாக வந்திருந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, பயணத்தை முடித்துவிட்டு இன்று பனிமூட்டத்திற்கிடையே உதகை கோத்தகிரி சாலை மார்க்கமாக புறப்பட்டார். இவர் சாலை வழியே கோவை சூலூர் விமான நிலையம் சென்றடைகிறார். மேலும், ஜனாதிபதி வாகனமும், அவரது பாதுகாப்பாளர்கள் வாகனமும், பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், மெதுவாக சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன.

error: Content is protected !!