India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் வனவிலங்கு தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கூடலூர் மற்றும் நாடுகாணி பகுதிகளில் நள்ளிரவில் மதுபோதையில் சாலையோரம் தங்குவோரால் யானை தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, வனவிலங்கு நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வனத்துறையினர், பொதுமக்கள் இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி நுகர்வோர் மின்சாரம் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்துத் தீர்வுகாணலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (12.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

உதகை ஏடிசி திடலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், செயலாளர் பாமா ரமேஷ் முன்னிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை புழக்கத்தைத் தடுக்கத் தவறிய மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

நீலகிரி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராகுல் நேற்று அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வில் முன்னாள் எம்பி அர்ஜுனன், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் மற்றும் ஒன்றிய அவைத் தலைவர் போஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ராகுலை வரவேற்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தனியார் நிறுவனங்கள் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இம்மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0423-2444004, 9489026936 எண்களை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு <

நீலகிரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.