India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்,’தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 80பேர், 4 குழுக்களாக உதகை, கூடலூர், குன்னூர். கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடப் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 42 மண்டல அதிகாரிகள் கொண்ட குழுக்கள் தயாராக உள்ளனர்” என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு மத நல்லிணக்கம் மொழி தொண்டு, ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் நீலகிரி மாவட்டம், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி நொண்டிமேடு ஒத்தெ மரம் பகுதியில், மழையின் காரணமாக ஒரு வீடு இடிந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக நிலகிரி மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்துவரும் நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வர பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள், அணைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கூடலூரில் 7.3 செ.மீ மழையும், கோடநாட்டில் 7.1 செ.மீ மழையும், உதகையில் 4.08 செ.மீ மழையும், தேவாலாவில் 3.9 செ.மீ மழையும், பார்வுட்டில் 3.5 செ.மீ மழையும், கீழ்கோத்தகிரியில் 3.3 செ.மீ மழையும், கேத்தியில் 3.2 செ.மீ மழையும், சேரமுள்ளி மற்றும் பர்லியாரில் தலா 3 செ.மீ மழையும், கோத்தகிரியில் 2.7 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(2.12.24) மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. முன்னதாக, உதகை, கூடலூர் தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது கோத்தகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகை, கூடலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (2.12.24) மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாணாக்கரின் நலன் கருதி 2 தாலுகாக்களில் விடுமுறை என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு நேற்று வருகை தந்த இந்திய தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து அவர்களை, தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் மலர்கொத்து கொடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தண்ணீரு வரவேற்றார். இந்த சந்திப்பின்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். எஸ் நிஷா உடன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.