India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ குன்னூர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் ➤ கோத்தகிரி சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை ➤ கோத்தகிரியில் மரம் விழுந்து வீடு சேதம் ➤ கொளப்பள்ளியில் யானையால் மீண்டும் ஒரு வீடு தகர்ப்பு ➤ உதகை மலர்கண்காட்சிக்கு நீலகிரி மலர்கள் தயார் ➤ காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம் ➤ ஸ்ரீமதுரை ஊராட்சி ஐந்தாவது ஆண்டுவிழா ➤ மலை இரயில் சேவை மீண்டும் 3 நாட்கள் ரத்து
நீலகிரியில் பல ஊர்களுக்கு பேருந்து செல்ல முடியாத நிலை உள்ளதை கருத்தில் கொண்டு மினி பஸ்கள் இயக்க படுகின்றன. இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி சிலர் தங்கள் வாகனங்களில் ஏர் ஹாரன் போட்டு உள்ளனர். மேலும், போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் விதி மீரி ஏர் ஹாரன் பயன் படுத்தினால் பேருந்தின் உரிமம் ரத்து செய்ய படும் என எச்சரித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி ரயில்வே பாலம் அருகே இன்று பனிமூட்டம் காரணமாக எதிரே வந்த வாகனம் தெரியாமல், லாரியும் – காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. வாகனங்கள் மட்டுமே சேதமடைந்தன. எனவே, பனிமூட்டமாக இருப்பதால் வாகனங்களை கவனமாகவும், மெதுவாகவும் ஓட்டும்படி அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாகக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.13) 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் ஊட்டியில் மேக மூட்டத்துக்கு இடையே சாரல் மழை தொடர்ந்தது. ஊட்டி படகு இல்லத்திற்கு, கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணியர் கணிசமாக வந்திருந்தனர். சுற்றுலா பயணியருக்காக, ‘மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு,’ என, நுாற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. சாரல் மழை தொடர்ந்ததால் மிதி படகு சவாரி மட்டும் நிறுத்தப்பட்டது. பிற படகுகள் வழக்கம்போல் இயங்கின.
1950ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கீழ்கோத்தகிரி அருகே ஏர்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டக்லஸ் மாடல் சி-47பி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, கோவையில் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது விமானம் மலையில் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை,கடும் பனி மூட்டம் காரணமாக விபத்து என தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் அறிவித்தது.
கூடலூர் பகுதியில் இருந்து சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் ஏஜென்ட், ‘போக்குவரத்து கட்டணம் 20 ரூபாய்; கூடுதலாக,15 ரூபாய் கட்டணம்’ என ஒரு சிலிண்டருக்கு 35 ரூபாய் கூடுதலாக வசூல் செய்வதாக நுகர்வோர் பலர் புகார் தெரிவித்துள்ளனர். வட்ட வழங்கல் அலுவலர் பொன்னரசு கூறுகையில், ”பாதிக்கப்படும் நுகர்வோர் எழுத்து மூலமாக புகார் தெரிவித்தால், அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
1.நீலகிரியில் வீட்டை இடித்த யானை: ஓட்டம் பிடித்த பெண்கள்
2.நீலகிரி: ரேஷன் கடை ஷட்டரை உடைத்து கரடி கலாட்டா
3.நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!
4.பாக்கு தோட்டத்தை சூறையாடிய யானைகள்
5.நீலகிரியில் டிஜிட்டல் கைது: ரூ.68 லட்சம் மோசடி
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதனால் நாளை (டிச.13) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.