India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

100ஐ அழைக்கும் போது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச்செல்லும். கடுமையான குற்றச்சம்பவங்கள், கலவரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, தீவிர விபத்துகள், சந்தேகத்திற்குரிய நபர்கள், குடும்ப வன்முறை, சுயபாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு அழைக்கலாம். 24 மணி நேரமும் காவல்துறை உங்களுக்கு உதவும். ஆனால் விளையாட்டாக 100ஐ டயல் செய்தால், கட்டாயம் கடும் தண்டனையும் உண்டு. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்க.

நீலகிரியில் 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு தினசரி, 30 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.மலை மாவட்டம் போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், கடந்த, 20 ஆண்டுகளில், 428 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என, போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மிலாடி நபி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம், பார்கள்,கடைகள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் அறிந்தால், அது குறித்த விவரத்தை அதன்படி, ‘கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், ஊட்டி (0423-2223802); உதவி ஆணையர் (ஆயம்) (0423-2443693); டாஸ்மாக் மாவட்ட மேலாளர், எடப்பள்ளி, குன்னூர் (0423-2234211) தெரிவிக்கலாம்.

கேரளாவில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 3பேர் இறந்துள்ளனர். பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு தொண்டை வலிகாய்ச்சல் அதிகரித்துள்ளதால் தங்களது குழந்தைகளுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் இருக்குமோ என பொது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்த்தல், வெண்ணீர் பருகவேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என நீலகிரி மருத்துவர்கள் எச்சரிக்கை. SHAREit

நீலகிரி மக்களே, கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். SHARE IT!

நீலகிரி மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டத்தில் 2025 – 2026 ஆண்டின் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் வருகிற 9,10ம் தேதிகளில் நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்கள்,வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் இரண்டு பேர் தவறாமல் பங்கேற்கும் வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களே! உங்கள் சொந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை வேண்டுமா? இந்தியாவின் வங்கிப் பணியாளர் தேர்வாணயம் (IBPS) கிராம வங்கி உதவியாளர் வேலைக்கு 7927 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதும். தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க இங்கே <

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உட்பட மார்க்கெட் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில், 1860ம் ஆண்டு முதல் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட தொடங்கியது.ஊட்டியின் முதல் போலீஸ் ஸ்டேஷனாகும்.கடந்த, 2016ம் ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய கட்டிடம் காவல் துறையினரின் குழந்தைகளை பராமரிக்கும் மையமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.