Thenilgiris

News January 6, 2025

நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரிசி அட்டைதாரருக்கும் பொங்கல் பரிசு தொகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்கள் ஏதேனும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்களான (1967) மற்றும் (18004255901) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட அளவில் புகார் தெரிவிக்க 0423 2441216 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News January 6, 2025

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்த செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் 2015-16 ல் இருந்து செயல் படுத்த பட்டு வருகிறது. இதில் நீர் பாசன கருவிகள் 100% மானியத்தில் சிறு விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கு 75 % மானியத்திலும் வழங்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். 

News January 6, 2025

நீலகிரி கிராமங்களில் 1133 கூட்டம்: எஸ்பி தகவல் 

image

2024-ல் கோவை சரகத்தில், போதை பொருள் விற்பனை, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல், குற்ற நடவடிக்கை தடுக்க முயற்சி மேற்கொள்ளுதல் போன்ற அறிவுரை வழங்கி, அதன் மூலம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து, குற்றம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நீலகிரி கிராமங்களில் 1133 கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டதாக நீலகிரி எஸ்பி,. நிஷா தெரிவித்துள்ளார்.

News January 5, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (05.1.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News January 5, 2025

தடுப்பு சுவரில் மோதி வாகனம் விபத்து

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று  இரவு உதகையிலிருந்து, கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா பதிவு என் கொண்ட வாகனம், சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி, விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 5, 2025

எந்த விலங்கு கடித்தது? வனத்துறை தீவிர விசாரணை

image

நீலகிரி மாவட்டம் எடக்காடு அருகே தேயிலை எஸ்டேட் தொழிலாளி சதீஷ் என்பவரை, வனவிலங்கு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அவரை கடித்த விலங்கு குறித்து விசாரித்து வரும் வனத்துறையினர், 2 இடங்களில் கூண்டுகளை அமைத்தும், 7 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொறுத்தியும் கண்காணித்து வருகின்றனர்.

News January 5, 2025

நீலகிரி: உரம் இருப்பு தேவை குறித்து கண்காணிக்க குழு அமைப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் உரம் இருப்பு மற்றும் தேவை குறித்து கண்காணிக்க வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 9363440360 என்ற எண்ணில் வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் என வேளாண்மை இணை (பொறுப்பு) இயக்குநர் கிருஷ்ணவேணி செய்தி வெளியிட்டுள்ளார்.

News January 5, 2025

நீலகிரி: வனவிலங்கு தாக்கியவருக்கு உதவித்தொகை

image

குந்தா அருகே உள்ள எடக்காடு கிராமத்தில் கூலி வேலை செய்து வரும் தொழிலாளி சதீஷ் (32) நேற்று வனவிலங்கு தாக்கி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு வனத்துறை அரசு நிவாரண நிதி வழங்க உள்ள நிலையில், நேற்று முதல்கட்டமாக அவரது மனைவி சங்கீதாவிடம் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் மணிமாறன் வழங்கினார்.

News January 5, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (04.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

News January 4, 2025

நீலகிரி மாவட்டத்தில் 366 சிசிடிவி கேமராக்கள்

image

குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கை பெறுகின்றன. இந்த நிலையில் கோவை சரகத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பொது இடங்களில் மக்களின் பங்களிப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நீலகிரியில் மட்டும் 366 கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாக எஸ்பி நிஷா தெரிவித்தார்.

error: Content is protected !!