Thenilgiris

News September 18, 2025

நீலகிரி: ஓவியத்தை கண்டு பயந்த காட்டு யானை!

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள மசினகுடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலையை கடந்த காட்டு யானை ஒன்று சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தைப் பார்த்து, நிஜ யானை என அதிர்ச்சி அடைந்தது. முதலில் பயந்து நின்ற அந்த காட்டு யானை, அச்சத்துடன் அந்த யானை பார்த்து அச்சத்துடனே நின்றது. இக்காட்சியை அப்பகுதி வழியே சென்ற சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்தனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

News September 18, 2025

நீலகிரி: வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை!

image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே படைச்சேரி பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தது. இந்த யானை, தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே, காபி மரங்களை சேதப்படுத்தியது. அப்போது, பாக்கு மரம் வீட்டு கூரை மீது விழுந்ததில் சேதம் ஏற்பட்டது. வீட்டினுள் அறையில் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சகர் அய்யனார் நேரில் ஆய்வு செய்தார்.

News September 18, 2025

நீலகிரியில் காட்டு யானை அட்டகாசம்!

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூ ஹோப் கிளை நூலகத்தை இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று நூலகத்தின் கதவை சேதப்படுத்தி உள்ளது. உணவு தேடி வந்த யானை கதவை சேதப்படுத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நூலகத்தின் கதவை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் யானை உணவு தேடி வரலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

News September 18, 2025

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் 5 திட்டங்களுக்கு இ-சேவை வழியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை போன்றவற்றை http://www.tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை உடனடியாக மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 18, 2025

நீலகிரி: மரம் வெட்ட அனுமதிக்கு அலைய வேண்டாம்!

image

நீலகிரி மாவட்டத்தில் பட்டா உள்ள நிலங்களில் மரங்களை வெட்ட அனுமதி கோர http://
www.nilgiristreecuttingpermissons.org/ என்ற இணைய தளபக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க பட்டதும், அவை குழுவினரால் புலத்தணிக்கை செய்யப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன. மேலும் மரங்களை வெட்ட அனுமதி வழங்கும் உத்தரவும் இணையதளத்திலேயே வழங்கப்படும்.

News September 18, 2025

நீலகிரி: 12பேரைக் கொன்ற யானையை பிடிக்க தீவிரம்

image

முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, கடந்த 15ஆம் தேதி, 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற யானையைப் பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் வனச் சரகர்கள், வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து விரிவான தேடுதல் பணி தொடங்கப்பட்டது. யானையின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதனை கண்காணித்து மயக்க ஊசி போட்டு பிடிக்க தயார் நிலையில் உள்ளனர்.

News September 18, 2025

நீலகிரி: டிரெண்டிங் AI போட்டோ எடிட் செய்தால் அபாயம்!

image

நீலகிரி மக்களே.., Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்களில் 19 வயதை கடந்தும் முதிர்வு தொகை பெறாதவர்களின் பெயர் பட்டியல் nilgiris.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே முதிர்வு தொகை பெறாதவர்கள் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகையில் இயங்கும் அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

News September 18, 2025

நீலகிரி: தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அழைப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய தாலுகாக்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புபவர்கள் வருகின்ற அக்.10ஆம் தேதிக்குள் www.tnesavai.tn.gov.in எனும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

News September 18, 2025

நீலகிரி: விதிமீறிய காட்டேஜ்களுக்கு சீல்!

image

நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிமீறி காட்டேஜ் போல செயல்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்க, வருவாய், நகராட்சி, சுற்றுலா துறைகள் ஒருகிணைந்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணி நடந்து வருகிறது. இந்தக் குழுவினர் ஊட்டி உட்பட சில பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, 800 கட்டடங்கள் கொண்ட காட்டேஜ்களின் பட்டியலை தயார் செய்து, ஆய்வு நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!