India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் சாலை வசதி, வீட்டுமனை பட்டா குடிநீர் மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து சுமார் 143 மனுக்கள் குவிந்தன. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.
உறைபனிப் பொழிவு காரணமாக உதகையில் கடும் குளிர் நிலவுகிறது. நவம்பரில் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை உறைபனி நிலவும். வெப்பநிலை மிகவும் குறைந்து, மைனஸ் டிகிரி செல்சியஸை எட்டி குளிரான காலநிலை நிலவுகிறது. அவலாஞ்சி உட்பட்ட சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸுக்கும் கீழ் சரிந்திருக்கிறது. அவலாஞ்சியில் நேற்று அதிகாலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸும், உதகையில் 2.3 டிகிரி பதிவானது.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான தன்னார்வலர்கள் சேர்க்கையின்கீழ் கோத்தகிரி அரசு பள்ளியில் பிளஸ்-1 பயிலும், இருளர் பழங்குடியின மாணவி பார்த்தசாரதி, இந்த திட்டத்தில் இணைந்து, எழுத படிக்க தெரியாதவர்களுக்கு, சொல்லி தரும் பணியில் தன்னார்வலராக இணைந்து சாதித்த மாணவி தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் 44 பேர் அடங்கிய குழுவில் இடம் பெற்று பிரதமரிடம் நாளை வாழ்த்து பெற சென்றார்.
குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் உணவு தேடி சிறுத்தை குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கின்றன. அதில் எடப்பள்ளி பந்துமை இந்திரா நகர் பகுதியில், இரவு நேரங்களில் நாய் வேட்டையில் சிறுத்தை ஈடுபட்டு உள்ளது. அப்பகுதியில் 4 நாட்களில் 3 நாய்களை வேட்டையாடியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து நேற்று வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (06.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2 லட்சத்து79ஆயிரத்து 21ஆண் வாக்காளர்களும் 3 லட்சத்து 5 ஆயிரத்து 41 பெண் வாக்காளர்களும் 18 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 5 லட்சத்து 84 ஆயிரத்து 260 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.உதகமண்டலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து98 ஆயிரத்து 405 வாக்காளர்களும்,கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 95ஆயிரத்து 312 வாக்காளர்களும்குன்னூர் சட்டமன்ற தொகுதியில்1லட்சத்து 90 ஆயிரத்து 543 உள்ளனர்.
வடக்கில் இருந்து வரும் குளிர் காற்றின் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில் அடுத்த,24 மணி நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அடர்ந்த வனப்பகுதியாக உள்ள அவலாஞ்சியில், இதன் தாக்கம் கடுமையாக உள்ளது.
உதகையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக துணை செயலாளர் ஜே.ரவிகுமார் பெற்றுக்கொண்டார். உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.
சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. சிறப்பு பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறும் குரூப்-4 தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜன.9ஆம் தேதி தொடங்குகின்றது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25 பேர் இலவச பயிற்சி வகுப்புகளின் மூலம் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.