Thenilgiris

News September 19, 2025

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் 4 நாள் மூடல்!

image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வரும் செப்.23 முதல் 26 வரை 4நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், பூங்காவின் மேம்பாட்டிற்காகவும் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

News September 19, 2025

நீலகிரி: தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வேண்டுமா?

image

நீலகிரி மக்களே தமிழக அரசின் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் ஆதவரற்ற குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தாய், தந்தை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு 18வயது வரை வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப அட்டை, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட நகலுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம், கலெக்டர் ஆபீஸ், குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் பண்ணவும்<<>>. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 19, 2025

நீலகிரி: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 19, 2025

நீலகிரி: BE/B.Tech படித்தால் மத்திய அரசு வேலை!

image

நீலகிரி மக்களே.., மத்திய அரசின் மின்னனு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

நீலகிரி: ஈஸியா நீங்களே ஆதார் அப்டேட் செய்யலாம்!

image

நீலகிரி மக்களே நீங்கள் ஆதார் கார்ட் திருத்தங்கள் மற்றும் அப்டேட்களுக்கு ஈ-சேவை, ஆதார் சேவை, தபால் சேவை மையங்களை நாடிய காலம் மலையேறிவிட்டது. இசேவை மையங்களுக்கு நேரடியாக செல்லாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவைகளை மாற்ற முடியும். ஆதார் விவரங்களை வீட்டில் இருந்தே திருத்த m-Aadhaar என்ற மொபைல் செயலியை <>டவுன் லோடு<<>> செய்து திருத்தலாம். இதை மற்றவர்களுக்கு உடடினயாக SHARE பண்ணுங்க.

News September 19, 2025

நீலகிரியில் வரும் 28ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு ஆனது வருகின்ற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. குன்னூரில் சிம்ஸ் பார்க் அருகில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி ஒரு தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் நாள் அன்று காலை 8:30 – 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குச் செல்ல டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

News September 19, 2025

நீலகிரி: ஆட்கொல்லி யானைக்கு ரேடியோ காலர் பொருத்த தயார்

image

கூடலூர் ஓவேலி வனப்பகுதியில், மனித-யானை மோதலை ஏற்படுத்தி வரும் யானையைப் பிடிக்க, சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், நான்கு கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் யானையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிடிக்கப்படும் யானைக்கு பொருத்துவதற்காக ரேடியோ காலரும் தயார் நிலையில் உள்ளது.

News September 19, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய ஆறு உட்கோட்டங்களிலும் இன்று (18.09.2025) இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் குறித்து நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.

News September 18, 2025

நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் கூடலூர் வட்டம் நெல்லியாலம் பகுதிக்கு நாளை (செப்.19) பாரிஸ் ஹாலில் முகாம் நடைபெறுகிறது. சேரங்கோடு ஊராட்சிக்கு அய்யன்கொல்லி சர்ச் ஹாலிலும், ஊட்டி வட்டம் தூனேரி கிராம ஊராட்சிக்கு அணிக்குகோரை சமுதாயக்கூடத்திலும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த முகாம்களில் அளிக்கலாம்.

News September 18, 2025

செப்.20ல் நீலகிரிக்கு வரும் எம்பி., ஆ.ராசா!

image

ஊட்டி தமிழக மாளிகையில் வருகிற 20ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு கூட்டத்தில் நீலகிரி எம்.பி. ஆ. ராசா பங்கேற்கிறார். மேலும், மாலை 4.30 மணிக்கு ஏடிசி பகுதியில் நடைபெறும் “ஓர் அணியில் தமிழ்நாடு” பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். இந்த தகவலை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கே.எம். ராஜு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!