India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலையில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டு எப்.சி. பணி நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததால் காலையிலிருந்து மாலை வரை இப்பணி நடந்தது. ஒரு வழி பாதையில் மட்டும் வாகனங்கள் செல்ல முடிந்தது. பிரதான சாலை என்பதால் எப்.சி. சரிபார்க்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூடலூர் அருகே ஆணை செத்தகொல்லி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நேற்று இருந்து கிடந்தது தகவல் அறிந்த வனத்துறையினர் ஆய்வு நடத்தியதில் இறந்த சிறுத்தையின் உடலில் கீறல்கள், காயங்கள் இருப்பதால் இரண்டு சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட மோதலில் இறந்திருக்க வாய்ப்புள்ளது. உடற்கூறாய்வு பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு காரணம் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (06.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி: குன்னூர் நகரில் புளூஹில்ஸ் பகுதியில் நகராட்சி ஆணையர் குடியிருப்பு அருகே, நகராட்சி ஊழியர்கள் செடி , கொடி, புதர்களை வெட்டி அகற்றி, அவைகளை எரியூட்டினார்கள். அப்போது காற்றின் வேகத்தில் தீ மள ,மளவென்று வேகமாக பரவியது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன், குன்னூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணி நிலைய குழுவினர் விரைந்து சென்று, மேலும் பரவாமல் இருக்க எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
குந்தா வனச்சரகம், பிக்கட்டி காவல் பகுதியில் அடர்ந்த வனத்தில், ஊசிமலை தேவபெட்டா முருகன் கோவில் பகுதியில், பாலித்தீன் பேப்பரால் கூடாரம் அமைத்து, அங்கு இருந்த விறகுகளை கொண்டு நெருப்பு பற்ற வைத்து, குளிர் காய்ந்து இரவு அங்கேயே தங்கிய கோகுல் கண்ணன், ரித்திக், விக்னேஷ்வரன் ஆகிய மூவரையும் பிடித்து, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், வனப்பகுதியில் தங்க கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர்களின் விலை அதிகரித்து உள்ளது. நீலகிரியில் விளைவிக்கப்படும் லில்லியம், ஜெர்பாரா, கார்னேஷன் போன்ற கொய் மலர்களின் விலை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விலை அதிகரித்து உள்ளது. தற்போது பத்து மலர்கள் அடங்கிய கொத்து லில்லிய மலர்கள் ரூ.300, கார்னேஷன் ரூ.200 ஜெர்பாரா ஒரு மலர் ரூ.4, சிவப்பு ரோஜா ரூபாய் 6க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பாஜக அரசின் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வரைவு, புதிய நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று டெல்லியில் திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினார். அவருடன் மாணவர் அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு புதிய நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அனுமதிக்கப்பட்ட வழிதடத்தின் நீளம் அதிகபட்சம் 25 கி மீ ஆக இருக்க வேண்டும், மினி பேருந்துகள் இருக்கைகள் ஓட்டுநர் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து 25க்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ள நிலையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் வனவிலங்கு வேட்டையை தடுக்க தமிழ்நாட்டில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வேட்டை தடுப்பு இரவு சிறப்பு ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபடத் தொடங்கினர். வன அலுவலர் கௌதம் தலைமையில் 10 குழுக்கள் தனித்தனியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.