Thenilgiris

News January 13, 2025

நீலகிரியில் 30 குண்டுகள் முழங்க அஞ்சலி

image

குன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு எஸ்ஐ மைதீன் அப்துல் காதர் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் குன்னூர் காவல் துறை குடியிருப்பு உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு, பின்பு மக்களின் பார்வைக்காக போலீஸ் மைதானத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏடிஎஸ்பி சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார். பின்னர் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News January 13, 2025

நீலகிரியில் 2 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்

image

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஓட்டல் பார்கள் இம்மாதம் 15ஆம் தேதி நடக்கும் திருவள்ளுவர் தினம் மற்றும் 26ல் நடக்கும் குடியரசு தினத்தை முன்னிட்டு செயல்படாது. மேற்கண்ட நாட்களில் மது கடைகள் ஏதேனும் திறந்து இருந்தால் ஏடிஎஸ்பி 0423-2223802, உதவி கமிஷனர் 0423-2443693 ஆகிய எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

News January 13, 2025

நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்

image

உதகை நகரில் நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நடைபாதையில் வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகனங்கள் வரும் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News January 13, 2025

முதுமலை காட்டில் கரடி விடுவிப்பு

image

மஞ்சூர் பகுதியில் இரவில் நடமாடி கடைகளை, உடைத்து பொருட்களை சூறையாடிய கரடி, இங்கு உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சதீஷ் என்ற தொழிலாளியை தாக்கி, கடந்த வாரம் கொன்றது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 2 கூண்டுகளையும், 7 கேமராக்களையும் வனத்துறை வைத்தது. இந்நிலையில் நேற்று கரடி கூண்டில் சிக்கியது. இந்நிலையில் பிடிபட்ட கரடியை முதுமலையில் பத்திரமாக வனத்துறையினர் விடுவித்தனர்.

News January 12, 2025

தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு!

image

கூடலூர் வன கோட்டம், பந்தலூர் வனச்சரகத்திற்குட்பட்ட, பந்தலூர் பிரிவு பாரி அக்ரோ தேயிலை தோட்டப் பகுதியில், சிறுத்தை ஒன்று அழிகிய நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து, அந்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தையை, தணிக்கை வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், கால்நடை மருத்துவர் உடற்கூறாய்வு செய்து, அப்பகுதியில் எரியூட்டினர்.

News January 12, 2025

ஊட்டி தாவரவியல் பூங்காவில் முக கவசம் கட்டாயம்

image

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும், சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிய வேண்டும் என, பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், முக கவசம் அணிய, ஆட்சியர் உத்தரவிட்டு உள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நிர்வாகம், பூங்கா நுழைவாயிலில், மாஸ்க் தொடர்பாக அறிவிப்பு செய்து, ஒட்டி உள்ளது.

News January 12, 2025

நீலகிரி கோத்தர் பழங்குடியினர் துணை முதல்வருக்கு நினைவு பரிசு

image

சென்னை உணவுத் திருவிழாவில் நீலகிரி சார்பாக பங்கேற்ற கோத்தகிரி பகுதியில் உள்ள கோத்தர் இன பழங்குடி மக்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களின் கைவினைப் பொருட்கள் ஆன மண்பாண்டத்தை நினைவு பரிசாக வழங்கினர். கோத்தர் இன மக்கள் மண்பாண்டங்களில் படையல் இட்டு புத்தாண்டை தொடங்குவர் என்பது அவர்களின் பாரம்பரிய பழக்கம்.

News January 12, 2025

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரின் இன்றைய நிகழ்ச்சி நிரல்

image

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது அலுவலகத்தில் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் டம்ளர் முக்கு பயணியர் நிழற்குடையை திறந்து வைக்கிறார், நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்கிறார், மஞ்சனகொரை பகுதியில் உள்ள இலவச ஆம்புலன்ஸ் வழங்கி ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வை துவக்கி வைக்க உள்ளார்

News January 12, 2025

பொங்கல் பரிசு புகார்கள்: இந்த எண்களை அழைங்க!

image

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பாக ஏதேனும் புகாரில் இருப்பின் பொதுமக்கள் மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் 04232441216, தனி வட்டாட்சியர் (குடிமை பொருள்) ஊட்டி 9445000259, குந்தா வட்ட வழங்கல் அலுவலர் 9445000263, கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் 7904497671, குன்னூர் வட்ட வழங்கல் அலுவலர் 9585849991 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2025

கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் ஆ.ராசா சந்திப்பு

image

கூடலூர் சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்த நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆலோசனை நடத்தினார். கூடலூர் தொகுதியில் நீண்ட காலமாக இருந்துவரும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் எம்எல்ஏ திராவிட மணி, பரமேஷ் குமார், அம்சா, வாசு, சகாதேவன், புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!