India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களை அறிந்திட நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

நீலகிரி மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இங்கே <

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளும் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் மூடப்படும் என நீலகிரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும், போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆசிரியர் மாரியப்பன் (52) மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் நீலகிரி எஸ்.பி. நிஷா, ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததை ஏற்று, ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாரியப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நீலகிரி மக்களே, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 48 ‘அசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.91,200 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நீலகிரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <

நீலகிரி மக்களே, மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். இதற்கு செப்.23ம் தேதிக்குள் <

நீலகிரி மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். <

நீலகிரி மக்களே, மத்திய அரசின் மின் விநியோகம் செய்யும் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம் தொழிற்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,149 இடங்கள் உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.13,500 – ரூ.17,500 வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.