India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில், குடியரசு தின விழா 26-01-2025 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் பொங்கல் பரிசு தொகுப்பை 42,764 பேர் வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பச்சரிசி, வெள்ளை சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், பந்தலூர் தாலுகாவில் 88 % பேரும், கூடலூரில் 86 % பேரும், கோத்தகிரி, குன்னூர், குந்தா, தாலுகாவில் 77 % பேரும் மட்டுமே வாங்கியுள்ளதாக, வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 வழங்கியபோது 99% பேர் வாங்கியதாகவும் தகவல்.
நீலகிரி: உதகை தாவரவியல் பூங்கா அருகே நடைபாதையில் தடையாக உள்ள பெட்டி கடைகளை, வியாபாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ”நடைப்பாதையை ஆக்கிரமித்து, பயணிகள் நடமாட முடியாத அளவுக்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், உடனே தாங்களாகவே பொருட்களை அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
2025-2027ஆம் ஆண்டிற்கான நீலகிரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மாவட்டத் தலைவராக அப்துல் பஷீர், மாவட்டத் துணைத் தலைவராக அப்துல் கபூர், மாவட்டப் பொதுச்செயலாளராக பிரோஸ் ஜம்ஷீர், மாவட்டச் செயலாளராக சக்கீர், மாவட்ட பொருளாளராக செமியர் மற்றும் மாவட்ட உறுப்பினராக ரபீக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13-வது கொண்டே ஊசி வளைவில், காட்டு யானைகள் சாலை ஓரத்தில் முகாம் இட்டுள்ளன. தண்ணீரைத் தேடி அடர்ந்த காட்டை விட்டு வெளியே வந்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் சாலையை கடக்கும் வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சிக்குட்பட்ட ஆமைக்குளம் பகுதியில் பந்தலூர் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி ஸ்டாலின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுனருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அழைத்து சென்றனர்.
மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சமவெளி பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் தனித்தனி குழுவாக அலைந்து, திரிந்து வருகிறது. இதில் நேற்று இரவு காட்டேரி பூங்கா பகுதியில் ஐந்து காட்டு யானைகள் கூட்டமாக சாலைக்கு வந்து அங்குமிங்கும் நடமாடியது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 29ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் தெரிவித்துள்ளார்.டிச10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 29ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7338721400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருநங்கையர் தினமான வரும் ஏப்ரல் 15ம் தேதி, திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. அரசு உதவி பெறாமல், வாழ்வில் சுயமாக முன்னேறிய, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு உதவியோருக்கு விருது வழங்கப்படுகிறது. திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது. அடுத்த மாதம்10ம் தேதிக்குள், awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.